Just In
- 5 hrs ago 4 மாஸ் போன்கள்.. இந்த வாரம் வெளியான லேட்டஸ்ட் போன்கள்.. பட்ஜெட்ல எது பெஸ்ட்?
- 12 hrs ago அசர வைக்கும் விலையில்.. Jio-வின் 14 நாள் ரீசார்ஜ் திட்டம்.. டெய்லி எவ்ளோ டேட்டானு சொன்னா ஷாக் ஆகிடுவீங்க!
- 13 hrs ago போட்டாப் போட்டி.. மாதம் ரூ.99 முதல் 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 3 மலிவான திட்டங்கள்.. எது பெஸ்ட்?
- 15 hrs ago எல்லாமே புதுசு.. 50MP கேமரா.. 128GB மெமரி.. 500mAh பேட்டரி.. ரூ.15000 க்குள் கிடைக்கும் 5ஜி போன்கள்..
Don't Miss
- Lifestyle உங்க காதலன்/காதலி சண்டைக்கோழி மாறி சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்களா? அப்ப இத முதலில் பண்ணுங்க...!
- Sports WPL கோப்பையை வென்றது ஆர்சிபி.. பெங்களூருவின் 17 ஆண்டு கனவை நிறைவேற்றிய மகளிர் அணி,, டெல்லி தோல்வி
- News ஆணவ பேச்சு.. உங்களால் மக்களை சந்தித்து வெல்லவே முடியாது.. நிர்மலா சீதாராமனுக்கு ராஜீவ் காந்தி பதிலடி
- Movies Game Changer: கேம் சேஞ்சர் படத்தில் இரட்டை வேடங்களில் கலக்கும் ராம் சரண்.. வெளியானது கேரக்டர் பெயர்!
- Finance கேமிங் துறையில் இறங்கும் லிங்க்டுஇன்.. அட இது புதுசா இருக்கே..!!
- Automobiles டிக்கெட் விலை வெறும் ரூ.27 கோடி... வாழ்க்கையில ஒருமுறையாவது தூரத்தில் நின்று பார்த்துடணும்!!
- Education புதுச்சேரி என்ஐடி கல்வி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை...!!
- Travel உலகிலேயே மிகப்பெரிய 10 விமான நிலையங்கள் இவை தான் – இந்தியாவிலிருந்து இடம் பெற்றவை எத்தனை?
ராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ராமர் பாலம் இருப்பது குறித்து தெளிவாக காட்டியது. துள்ளியமான அதிநவீன செயற்கைகோள் உதவியுடன் ராமர்பாலம் இருப்பதை காண முடிந்தது.
இந்தியாவில் இருந்து ராமர், பாலம் அமைத்து தனது படைகளுடன் இலங்கை சென்றார். அங்கு ராவணணுடன் போரிட்டு கடத்தி செல்லப்பட்ட தனது மனைவி சீதாவை ராமர் மீட்டார்.
இதன் கதையை ராமாயணம் என்று வால்மீகி எழுதியுள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் உள்ளது. இதை தமிழில் கம்பர் எழுதியதால் கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவையும் இலங்கையும் இணைக்கும் விதமாக மணல் மற்றும் பாறை கற்களால் பாலம் போன்று கட்டப்பட்டதை போல் தென்பட்டு வந்தது. இது தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரை இருந்தது என்று கூறப்படுகிறது. இதை ஒரு சிலர் ஆதாம் பாலம் என்றும் ராமர் பாலம் என்று நம்பி வந்தனர். ஒரு சிலர் இயற்கையாக உருவான மணல் மேடு என்று கூறி வந்தனர். இதனால் பொது மக்கள் மத்தியில் ராமர் பாலம் குறித்து கருத்து மோதலுக்கு பஞ்சம் ஏற்பட்டத்தில்லை. ராமர் பாலம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்தன. இது இயற்கையான மணல் மேடா இல்லை ராமர் படைகளுன் செல்லும் போது உருவாக்கப்பட்டதா என்று சந்தேகம் நிலவி வந்தது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சையின்ஸ் சேனல் நடத்திய ஆய்வில் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராமர் பாலம் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் இதை மனிதர்கள் தான் கட்டியுள்ளனர் என்று ஆய்வுகளின் முடிவின்படி அதிகாரப்பூர்வாக அறிவித்தது. மேலும் நாசா விண்வெளி ஆய்வு மைய அதிநவீன செய்கைகோள் உதவியுடன் வீடியோவையும் வெளியிட்டது.
ஆய்வின் படி எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் மணல் மேடு குறித்து வெளிநாட்டு ஆராய்சியாளர்கள் கூறியதாவது: அதில் ராமர் பாலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 30 மைல் அமைந்துள்ள. மணல் மற்றும் கிடைத்த கற்களை பார்க்கும் போது, ராமர் பாலம் அமைக்கப்பட்ட பிறகே மணல் மேடு ஏற்பட்டுள்ளது. மணல் மேடுகளின் வயது சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையாவை. இவ்வாறு அந்த வீடியோ தொகுப்பில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் அதிவெப்பமான 15 இடங்களை வெளியிட்ட இணையதளம்: இந்தியாவில் எத்தனை இடம் தெரியுமா ?
இதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ராமர் பாலம் இருப்பது குறித்து தெளிவாக காட்டியது. துள்ளியமான அதிநவீன செயற்கைகோள் உதவியுடன் ராமர்பாலம் இருப்பதை காண முடிந்தது. மேலும் அந்த வீடியோ இந்தியா முழுவதும் அல்லாமல் உலம் முழுக்க பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Are the ancient Hindu myths of a land bridge connecting India and Sri Lanka true? Scientific analysis suggests they are. #WhatonEarth pic.twitter.com/EKcoGzlEET
— Science Channel (@ScienceChannel) December 11, 2017
எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு!
கூகிள் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைப் பற்றி சில உண்மைகள் மற்றும் இந்தியாவின் மென்பொருள் வளர்ச்சியின் பற்றி அவரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. பல்வேறு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்துக்கள் கேட்டனர். மேலும் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே இந்த அமர்வு நடத்தப்பட்டது.
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் நெக்ஸ்.!
43 வயதான தலைமை நிர்வாக அதிகாரி, சில வேடிக்கையான உண்மைகளை எளிதில் கூறினார். மேலும் கூகிள் ஒரு புதிய ஹோல்டிங் நிறுவனத்தை ஆல்பாபெட் என்று உருவாக்கியது. மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார் கூகிள் பிச்சை.
சுந்தர் பிச்சை வருமானம்:
இவருடைய வருமானம் பொருத்தமாட்டில் வருடத்திற்க்கு 200மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் ( ரூபாய்;12838100000.00) ஆக உள்ளது
பாயாசம் பிடிக்குமா:
சுந்தர் பிச்சையிடம் பாயாசம் பிடிக்குமா என்று கேட்டபோது 'எனக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும்" என்று சொல்லி சிரித்தார்.
கிரிக்கெட் ஆர்வம்:
ஹர்ஷா போக்லே கிரிக்கெட் ஆர்வம் பற்றி கேட்டபோது அவருக்கு கிரிக்கெட் பிடிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு மேலும் கல்லுரிக் காலத்தில் அதிக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பார். ஆனால் தற்போது உள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் மிகுந்தளவு ஆர்வம் இல்லை. என சுந்தர் பிச்சை கூறினார்.
தொழில் முனைவோர்:
தொழில் முனைவோர்க்கான சில கேள்வியை கேட்டபோது, அவர் கூறியது தொழில் முனைவோர்கள் எந்த அபயத்தையும் சந்திக்க நேரிடும் ஆனால் பயம் இருக்க கூடாது எனக் கூறினார். மேலும் செயல்முறையின் ஒரு பகுதியாக கூட தோல்வி அடைந்தால், அது உங்களை முன்னேற்றும் என்று அவர் கூறினார்.
பாதுகாப்பு:
பாதுகாப்பு பற்றி ஒருவர் கேட்டபோது சுந்தர் பிச்சை கூறியுள்ளது என்னவென்றால் 'நீங்கள் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால்" நீங்கள் உண்மையிலேயே சில திறமையான மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறீர்கள், நீங்கள் கற்றுக் கொள்ளவும் வளரவும் வாய்ப்பு அளிக்கிறது.என்று எளிதாக கூறினார்.
தொலைபேசி எண்:
சுந்தர் பிச்சை அவர்கள் டயல் செய்த ஒவ்வொரு எண்ணையும் நினைவு வைத்திருப்பது எப்படி எனக்கேட்ட போது, அவர் கூறியது அது மிகவும் எளிது லண்டன் எண்கள் பின் ஐந்து அல்லது ஆறு இலக்கங்கள் மட்டுமே இருந்தன எளிதாக ஞாபகம் இருக்கும். எனக் கூறினார்.
ஸ்மார்ட்போன்:
சுந்தர் பிச்சை அவர்கள் 1995 ல் தனது முதல் மொபைல் போன் மற்றும் 2006 ல் தனது முதல் ஸ்மார்ட்போன் வாங்கினார். தற்போது அவர்
20-30 ஸ்மார்ட்போன்கள் தனது வீட்டுக்குள்ளேயே பயன்படுத்துகிறார்.
கூகிள் தயாரிப்பு:
ஹர்ஷா அடுத்த கூகிள் பெரிய தயாரிப்பு என்ன என்றுகேட்டபோது. கூகிள் உலகம் பெரிய தயாரிப்புகளை எதிர்நோக்கியிருக்க வேண்டும் என்பதை நகைச்சுவையாக சொன்னார், மேலும் 150 கிமீ பவுளிங் மெசின் ஒன்று உருவாக்கப்படும் என நகைச்சுவையாக கூறினார்.
மிட்டாய் பெயர்:
அண்ட்ராய்டு ஒஎஸ் இந்திய மிட்டாய் பெயர் இடம்பெருமா எனக்கேட்டபோது அண்ட்ராய்டு ஒஎஸ் இன் அடுத்த பதிப்பிற்கான இனிப்பு (இந்தியர்கள் உட்பட) பெயர்கள் மற்றும் பொதுப் பெயரை புதிய பெயரைத் தீர்மானிக்கலாம் எனக் கூறினார். பெரும்பாலும் அனைத்து ஒஎஸ் பெயர் ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் தான் அதாவது, கிட்-கேட், ஜெல்லி பீன், மார்ஷ்மெல்லோ போன்றவை.
கூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி, சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன.?
உலகின் முன்னணி இணைய உலவியான கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமியின் தன்னம்பிக்கையும்,
அந்தச் சிறுமியின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான தமிழர் சுந்தர் பிச்சையின் பதிலுமே இன்றைக்கு இணையத்தில் ஹிட்டடித்திருக்கிறது.
அது குறித்த தகவல்கள் கீழே..
கூகுள்-இணைய உலகின் ராஜா:
பதினெட்டு வருடங்களுக்கு முன்பாக அமெரிக்கவைத்த தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட உலகின் முன்னணி இணைய உலவியான கூகுள் தனது கால்பதித்த அத்துணை துறைகளிலும் வெற்றியே கண்டுள்ளது.இதற்கு உதாரணங்களாக அதன் துணை இணையத்தளங்களான யூட்யூப்,கூகிள் மேப்,ஜிமெயில் உள்ளிட்ட பலவற்றை நாம் கூறலாம்.
அப்டினு சொல்றாரு எங்க அப்பா
எனக்கு சாக்லேட் பாக்டரியில் வேலை செய்யவும் பிடிக்கும்.ஒலிம்பிக்கில் நீச்சல் செய்யவும் பிடிக்கும்.கூகிள்ல வேலை கிடைச்சா பீன் பேக்ல உக்காந்து சறுக்கி விளையாடலாம்னு சொல்றாரு அப்பா.எனக்கு கம்ப்யூட்டர் ரொம்ப பிடிக்கும்.என்கிட்ட டேப்லெட் இருக்கு அதுல நான் கேம் விளையாடுறேன்.அப்பா தந்த கேம் ல ரோபோவ கட்டத்திற்கு மேலயும் கீழயும் நகர்த்தினால் கம்ப்யூட்டரைப்பத்தி அதிகமா தெரிஞ்சுக்கல அப்டினு சொல்றாரு எங்க அப்பா" என்று விரிகிறது அந்த சின்னஞ்சிறு மழலையின் கடிதம்.
படிச்சதுக்கு நன்றி
தனது கடிதத்தில் இறுதியாக,கூகுள்ல வேலைக்கு சேரணும்னா உங்களுக்கு அப்ளிகேஷன் அனுப்பணும்னு என்க அப்பா சொல்றாரு.ஆனா எப்படி அப்ளிகேஷன் அனுப்புறதுனு தெரியல.லெட்டர் எழுதினா போதும்னு அப்பா சொன்னாரு.என் லெட்டர படிச்சதுக்கு நன்றி. நா இத தவிர இன்னும் ஒரு லெட்டர் மட்டும் தான் எழுதியிருக்கேன்.அது கிறிஸ்துமஸ்காக என் அப்பாவுக்கு,"என்று தனது கடிதத்தை நிறைவு செய்கிறாள் அந்த அழகுச் சிறுமி.
கம்ப்யூட்டரும் ரோபோவும்
க்ளோயி-ன் இந்த கடிதத்திற்கு தனது மிகுந்த வேளைப்பளுவுக்கும் இடையில் அந்த தன்னம்பிக்கை சிறுமிக்கு பதில் கடிதம் எழுதி ஆச்சரியப்படுத்தியுள்ளார் கூகுள் நிறுவன சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சை."டியர் க்ளோயி,உன் கடிதத்துக்கு மிகவும் நன்றி.உனக்கு கம்ப்யூட்டரும் ரோபோவும் பிடிக்குமென்பதில் மகிழ்ச்சி .தொழில்நுப்டபம் குறித்து உனது படிப்பை தொடருவை என நம்புகிறேன்.
பள்ளிப்படிப்பிற்கு பிறகு
நீ கடினமாக உழைத்தால் உன் ஒலிம்பிக் நீச்சல் கனவிலிருந்து கூகுளின் வேலை கிடைப்பது வரை எல்லாம் நிஜமாகும்.உன் பள்ளிப்படிப்பிற்கு பிறகு உனது கடிதத்தை பரிசீளிக்கிறேன்"என பிரிட்டனைச் சார்ந்த 7வயது சிறுமியின் தன்னம்பிக்கைக்கு நம்பிக்கை அளிக்கிற வகையில் பதில் கடிதம் எழுத்தியுள்ளார்.
7 வயது சிறுமியின் தன்னம்பிக்கையும்,கூகுள் சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சையின் நம்பிக்கையளிக்கிற பதிலும் தானே இப்போது எல்லோருக்கும் தேவைப்படுவது.!
மேலும் படிக்க
புதிய கூகுள் லிஸ்ட் : லிஸ்டை க்ரியேட், எடிட், ஷேர் செய்வது எப்படி.?
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470