இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தும் புதிய எம்ஆதார் ஆப்.!
இந்த ஆப் பொதுவாக பயோமெட்ரிக் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது, எனவே இவற்றை பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய எம்ஆதார் ஆப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மிக உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் பொதுவாக நீங்கள் ஆதாருக்கு தெரிவித்த மொபைல் நம்பர் பயன்படுத்தி இவற்றை உபயோகப்படுத்த முடியும்.
ஆதார் பொதுவாக அனைத்து இடங்களில் பயன்படுத்தும் வனையில் உதவியாக உள்ளது. பல்வேறு தொழில்செய்யும் இடங்களுக்கும் மற்றும் பொதுநிறுவனங்களுக்கும் இவை அதிகம் பயன்படுகிறது, அதன்பின் தனிப்பட்ட அடையாளமாக இந்த ஆதார் அட்டை உள்ளது.

எம்ஆதார் ஆப்:
இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தற்சமயம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய எம்ஆதார் ஆப், அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு உதவியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஆதார்ஆப் பயன்பாடு:
இந்த எம்ஆதார் ஆப் பயன்பாடு பொறுத்தவரை தனிப்பட்ட நபர்களின் பெயர், பிறந்ததேதி,பாலினம்,முகவரி,புகைப்படம்,
ஆதார் எண், போன்ற அனைத்தும் இருக்கிறது, ஸ்மார்ட்போன் பயனர்கள் இவை மிக எளிமையாக அனைத்து இடத்திற்க்கும்எடுத்து சென்று பயன்படுத்தும் வகையில் உள்ளது.

பயோமெட்ரிக் :
இந்த ஆப் பொதுவாக பயோமெட்ரிக் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது, எனவே இவற்றை பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும் என்று இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

பீட்டா:
எனினும் இந்த எம்ஆதார் ஆப் பீட்டா நிலையில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதைவிடமேம்படுத்தல்கள் செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications