விரைவில் அறிமுகமாகும் ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலலேயே பணம் எடுக்கும் வசதி.!
தமிழ்நாட்டிலேயே சென்னையில்தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. தினந்தோறும் இந்த வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் டாப் லிஸ்டடில் தலைநகரம்தான் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளனர். அதாவது ஓ குரூப் ரத்தம் உள்ளவர்களை கொரோனா அத்தனை சீக்கிரம் அண்டாதாம்.. இந்த கண்டுபிடிப்பால் புது சலசலப்பு கிளம்பியுள்ளது. ஆனால் இதை முழுமையாக நம்ப வேண்டாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 200 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா தாக்கம் சீனாவில் குறையத் தொடங்கினாலும் பிற நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 38 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர், இருப்பினும் 4 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் 94 ஆயிரத்துக்கும் அதிகமானோரும்தமிழகத்தில் 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் டெல்லியில் 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னையில் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது.

இந்நிலையில் கோரோனா பரவலைத் தடுக்க ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே கியூஆர் கோடு மூலம் பணத்தை எடுக்கும்வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளிவயாகியுள்ளன.

மேலும் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிப்பட்ட எம்பேஸ் பேமண்ட் சிஸ்டம்(empays payment systems)என்ற நிறுவனம்பிரபல மாஸ்டர் கார்ட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த கார்ட்லெஸ் ஏடிஎம் சேவையை வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏடிஎம்கள் தயார் செய்யப்படவுள்ளதாக
மாஸ்டர் கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி வாடிக்கையாளரின் செல்போனில் உள்ள வங்கியின் நெட் பேங்கிங் செயலியை
திறந்து, கார்ட்லெஸ் ஏடிஎம் வசதி இருக்கும் இயந்திரத்தில் காட்டும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்த பின் எடுக்க வேண்டிய
தொகையை செயலியிலேயே பதிவு செய்தால் போதும் பணம் வந்துவடும் என கூறப்படுகிறது.

இந்த புதிய வசதியின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் ஏடிஎம் இயந்திரம் மூலம் நோய் பரவுவதை தடுக்கலாம் எனநம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications