Just In
- 1 hr ago தூள் கிளப்ப போகும் நோக்கியா.. கம்மி பட்ஜெட்.. வருகிறது புதிய போன்கள்.. எந்தெந்த மாடல்?
- 1 hr ago நொடிக்கு நொடி ஆர்டர்.. ரூ.7998 பட்ஜெட்ல iPhone லெவல்.. AI கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 2 hrs ago நிக்காம ஆர்டர் விழுது.. பாதிக்கு பாதி விலையில் Redmi ஸ்மார்ட் TV.. மெட்டல் டிசைன், 20W ஸ்பீக்கர்ஸ் வேற!
- 2 hrs ago நிலாவுல ட்ரைன் விட போறோம்.. நிலவில் ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்.. என்ன காரணம்?
Don't Miss
- Movies விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
- Automobiles தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
- News பயந்து ஓடிட்டாரே! வரிசையாக 4 ஓபிஎஸ்களை அனுப்பியது யார்? பன்னீர்செல்வம் அரசியல் வாழ்க்கைக்கே சிக்கல்
- Finance 2 ஆண்டுகளில் 71 கிலோ உடல் எடை குறைத்த சிஇஓ.. உயிர் பயத்தை காட்டிட்டாங்க..!!
- Lifestyle லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
UPI மூலம் ATM மையங்களில் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? இதற்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா?
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உண்மையைச் சொல்லப் போனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை, ஆன்லைன் பேங்கிங் சேவைகள் போன்ற டிஜிட்டல் முறை சார்ந்த சேவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். இதற்கான ஒரு முக்கிய காரணம், UPI பயன்பாடுகள் மற்றும் டிஜிட்டல் வாலெட் சேவைகளாகும். மக்களுக்கான வங்கி சேவையை மேன்மேலும் மேம்படுத்த, இப்போது ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியையும் வங்கிகள் அறிமுகம் செய்ய துவங்கியுள்ளன.
ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து ஏடிஎம்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டண இடைமுகம் (UPI) மூலம் Debit அல்லது ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பதைச் செய்ய முன்மொழிந்துள்ளது. இந்த 2022-23 நிதியாண்டிற்கான தனது முதல் நிதிக் கொள்கை அறிக்கையின் படி, "UPI ஐப் பயன்படுத்தி அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நெட்வொர்க்குகள் முழுவதும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை இப்போது செய்ய முன்மொழியப்பட்டுள்ளது" என்று RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ரா முறை என்றால் என்ன?
Cardless cash withdrawal: கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியின் கீழ், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும்போது வாடிக்கையாளர் தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது வங்கி செயலியின் மூலம் பணம் எடுக்கும் வசதியை வங்கிகள் அனுமதிக்கின்றன. உதாரணமாக, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் iMobile பயன்பாட்டைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
எந்தவொரு தெளிவான தகவலும் இல்லை
இருப்பினும், அத்தகைய வசதிகளை அளிக்கும் வங்கிகளின் எண்ணிக்கை இந்தியாவில் தற்சமயம் குறைவாகவே உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ரா முறை இந்தியாவில் எப்படி செயல்படும் என்பது குறித்த எந்தவொரு தெளிவான தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த புதிய அம்சம் எப்படி செயல்பட வாய்ப்புள்ளது என்பது நமக்கு தெரியும். UPI மூலம் பணம் எடுக்கும் முறை எப்படி வேலை செய்யும் என்பது குறித்து எந்த வழிகாட்டுதலை ரிசர்வ் வங்கி இன்னும் வெளியிடவில்லை என்பதே இதற்கான காரணம்.
UPI மூலம் பணம் எடுப்பது எப்படி வேலை செய்யும்?
இந்த செயல்முறை எவ்வாறு செயல்படும் என்பதில் தெளிவு இல்லை என்றாலும், ATM களில் UPI ஐப் பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான விருப்பத்தை விரைவில் காண்பிக்கும் என்று இந்தியாவின் அக்சென்ச்சர் நிதிச் சேவைகளுக்கான முன்னணி நிறுவனமான சோனாலி குல்கர்னி தெரிவித்திருக்கிறார். இந்த சேவை இரண்டு விருப்பங்களில் வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Cardless cash withdrawal விருப்பம் 1
- வாடிக்கையாளர் ஏடிஎம் முனையத்தில் கோரிக்கையின் விவரங்களை உள்ளிட வேண்டும்.
- ஏடிஎம் இயந்திரம் பரிவர்த்தனைக்குத் தேவையான QR குறியீட்டை உருவாக்கும்.
- வாடிக்கையாளர் UPI பயன்பாட்டைப் பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கேன் செய்து கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும்.
- வாடிக்கையாளருக்கு ஏடிஎம் பணத்தை வழங்கும்.
- ஏடிஎம் டெர்மினலில் UPI ஐடி மற்றும் பணம் எடுக்கும் தொகையை உள்ளிட பயனர்கள் அவர்களின் பயனர் UPI செல்போன் பயன்பாட்டில் கோரிக்கையைப் பெறுவார்.
- ஏற்கனவே இருக்கும் UPI ஆப்ஸ் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- வெற்றிகரமான அங்கீகாரத்திற்குப் பிறகு, ஏடிஎம்மில் பணம் வழங்கப்படுகிறது.
விருப்பம் 2: தொடுதிரை ஏடிஎம்கள்
QR குறியீட்டை ஸ்கேன் செய்து டெபிட் கோரிக்கை கிளிக் செய்ய வேண்டும்
இதுவரை கிடைத்த தகவலின் படி, ஏடிஎம் திரையில் தோன்றும் QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க வங்கிகள் அனுமதிக்கலாம். QR குறியீடுகள் ஸ்கேன் செய்து UPI மூலம் எப்படி பணம் செலுத்துகிறீர்களோ, அதுபோல ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன், வாடிக்கையாளர் டெபிட் கோரிக்கையை ஒப்புக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஏடிஎம் இயந்திரத்திலிருந்து உங்கள் பணத்தைப் பெற முடியும்.
எந்த வங்கிகளில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி இப்போது உள்ளது?
தற்போது ஏடிஎம் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது ஒரு சில வங்கிகளில் மட்டுமே உள்ளது. பாரத ஸ்டேட் வங்கி (SBI), எச்டிஎப்சி (HDFC) வங்கி, ஐசிஐசிஐ (ICICI) வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆகியவை இந்த வசதியை வழங்குகின்றன.
டெபிட் கார்டுகள் வழக்கற்றுப் போகுமா?
ரொக்கமில்லா ஏடிஎம்களில் பணம் எடுப்பது பயனர்களின் எண்ணிக்கையைக் கண்டறியும், டெபிட் கார்டுகளின் பயன்பாடும் வளர்ச்சியும் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெபிட் கார்டுகளில் ஏடிஎம் வித்ட்ரா தவிர வேறு பல பயன்பாடுகள் இருப்பதால் அவை காலாவதியாகிவிட வாய்ப்பில்லை. சோனாலி குல்கர்னியின் கூற்றுப்படி, வங்கிகள் ஏடிஎம் மென்பொருளை மேம்படுத்துவதற்கும் பிற கட்டண உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் செலவழிக்க வேண்டும், இது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470