இன்ஸ்டாகிராம் vs ரியாலிட்டி: சுந்தர் பிச்சை கூறிய உண்மை என்ன?
மோடி அவர்கள் அன்மையில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுந்தர் பிச்சையும் நானும் உரையாடினோம், மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது என்று மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பின்பு இந்தியாவில் அடுத்த 5ஆண்டுகளில் ரூ.75,000கோடி அளவிற்கு முதலீடு செய்வதற்கு கூகுள் நிறுவனம் தயாராகஇருப்பதாகசுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தாக்க முதல் இந்திய விவசாயிகள், இளைஞர்கள்,தொழில்முனைவோர், தொழில்நுட்பம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து சுந்தர் பிச்சை அவர்களும்,மோடி அவர்களும்பேசியுள்ளனர்.
இந்நிலையில் சுந்தர் பிச்சை அவர்கள் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து இன்ஸ்டாகிராம் வெர்சஸ் ரியாலிட்டி என்று கூறி இரண்டு புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். அதில் முதல் புகைப்படத்தில் சுந்தர் பிச்சையின் புகைப்படமும், இரண்டாவது புகைப்படத்தில் முதல் புகைப்படத்தின் பிஹைண்ட் தி சீன் காட்சிகளையும் பதிவேற்றியுள்ளார்.

அதாவது நிஜ வாழ்க்கையில் பார்க்கும் விசயங்களுக்கும் சமூக வலைதளங்களிலும் காணும் வாழ்க்கையும் நிச்சயமாக ஒரேமாதிரியானது அல்ல என்று விளக்கியுள்ளார்.

அந்த புகைப்படத்தின் கேப்சனில் பார்சிலோனா கால்பந்தாட்டத்தின் ஸ்கோரை செக் செய்து கொண்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார், இந்த புகைப்படம் ஷேர் செய்யப்பட்டு வெறும் நில மணி நேரங்களிலேயே 2.5லட்சம் லைக்குகளை
1500-க்கும் மேற்பட்ட கமெண்ட்களையும் இந்த பதிவு பெற்றது.

சமீபத்தில் சுந்தர் பிச்சை இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்தும் நோக்கத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.75,000கோடி அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அவர்கூறிய இந்த திட்டத்தின் கீழ் தமிழ், இந்தி, பஞ்சாப் என்று அனைத்து மொழிகளிலும் மக்களுக்கு டிஜிட்டல் வழியாக தகவல் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் இணையதள வசதி கிடைக்க வேண்டும் எனவும், இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப புதிய டிஜிட்டல் தயாரிப்புகளை ஏற்படுத்துதல், சேவைகளை அறிமுகம் செய்வது, வர்த்த நிறுவனங்களுக்கு தொழிலில் டிஜிட்டல் வசதிகள் ஏற்படுத்தி
கொடுப்பது, சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகியவற்றில் தொழில்நுட்பம் ஏற்படுத்துதல் ஆகியவற்றிக்கு இந்த முதலீடு
பயன்படுத்தப்படும் என்றும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

புதிய கண்டுபிடிப்புகள் மூலம் இந்தியா சிறந்த வழிகாட்டியாக உலக நாடுகளுக்கு இருக்கும் நாம் ஒன்றிணைந்து உழைத்தால் சிறந்த நாட்கள் நம்மை எதிர்நோக்கி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை என சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








