ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய இயந்திரவால்: என்ன செய்யுது பாருங்க.! வீடியோ.!
இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் பிரமிக்க வைக்கும் வகையில் தான் உள்ளது, அதன்படி ஜப்பானில் உள்ள கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு தீவீரமான நோக்கத்தின் கீழ் அணியக்கூடிய அனிமேஷன்
வால் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இதனுடைய பயன் என்ன?
இதனுடைய பயன் என்ன? என்று ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால் அளித்திருக்கும் பதிலானது எனக்கும் ஒரு அனிமேஷன் வால் கிடைக்காதா, என்கிற ஏக்கத்தை உருவாக்கி வடுகிறது.

நடுப்பகுதியிலேயே பறக்க வைக்க உதவுகிறது
பொதுவாக குரங்குகள் எந்தவொரு சிரமம் இல்லாமல் ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவுவதை பார்த்திருப்போம். அதுதான் இந்த படைப்பிற்கான உத்வேகம் ஆகும். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் குரங்குகள் வால்கள் ஆனது கிளைகளை பற்றிக்கொள்ள உதவும் ஒரு கூடுதல் உடல் உறுப்புகளாக செயல்படுவதோடு, தாவலின் போது குரங்கின் சமநிலை மையத்தை நகர்த்தி பாதுகாப்பான தரையிறக்கத்திற்காக அவைகளின் உடல்களை நடுப்பகுதியிலேயே பறக்க வைக்க உதவுகிறது.

பூனையின் சுறுசுறுப்பை வழங்கும்
இந்நிலையில் மனிதனுக்கு எதற்கு வால் என்ற கேள்வி வரும், ஆராய்ச்சியாளர்கள் கூறிய தகவலின்படி Arque tail என்ற பெயல் கொண்ட இந்த அனிமேஷன் வால் ஆனது மனதர்களுக்கு ஓரு பூனையின் சுறுசுறுப்பை வழங்கும்.
எதிர் சமநிலையை போல செயல்படும்
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் மனிதன் கனமாக பொருளை தூக்கும் போது அல்லது சுமக்கும் போது அருமையான முறையில் தசைகளின் மேம்படுத்த உதவும் Exoskeleton சூட்டை போல இந்த வால் எதிர் சமநிலையை போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் குதிரை
இந்த இயந்திரவால் வசதி மூலம் எதையவது தூக்க வேண்டும் என்றால் உங்களுக்கு குறைந்தளவு சக்தி மட்டுமே தேவைப்படும். குறிப்பாக கடல் குதிரையை முன்மாதிரியாக கொண்டு, இந்த சாதனம் வடிவமைப்பட்டுள்ளது.

நான்கு செயற்கை தசைகள் உள்ளன
ஜப்பான் ஆராய்ச்சியாளர்களின் அனிஷேன் வாலின் சிறப்பு என்னவென்றால் காற்றினால் இயக்கப்படும் நான்கு செயற்கை தசைகள் உள்ளன. அவைகள் எந்த திசையிலும் வாலை நகர்த்தவும், சுருட்டவும் உதவும். இதனால் அணிந்துள்ளவருக்கு எந்த சிரமும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மூலம் சக்தி வழங்கப்படும்
தற்சமயம் உள்ள வடிவமைப்பு காற்றினால் கிடைக்கும் அழுத்தத்தை நம்பி உள்ளது, ஆனால் செயற்கை தசைகள் ஆராய்சி முன்னேறி வருவதால் சில மாதங்களுக்கு பிறகு இந்த செயற்க்கை வாலுக்கு பேட்டரி மூலம் சக்தி
வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








