இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
இந்திய டெலிகாம் ஆபரேட்டர்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாஃபோன்-ஐடியா ஆகிய அணைத்து (Jio, Airtel, Vi) நெட்வொர்க் நிறுவனங்களும் இந்தியாவின் TRAI வலியுறுத்திய புதிய முயற்சிக்கு கூட்டாக சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசின் திட்டத்தை எதிர்த்த டெலிகாம்கள்.!
என்ன காரணத்திற்காக, இந்த 3 நிறுவனங்களும் இந்திய அரசின் திட்டத்தைக் கூட்டாக எதிர்த்துள்ளனர் என்ற விபரத்தை இப்போது தெரிந்துகொள்ளலாம்.
இந்திய அரசு சமீபத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு புதிய திட்டத்தை வழிநடத்த உத்தரவிட்டது.
அது என்னவென்றால், ஒரு பயனர் தனது போனில் அழைப்பைப் பெறும்போது, அந்த அழைப்பாளரின் ஐடி விபரங்களை காண்பிக்க வேண்டும் என்று இந்திய அரசின் திட்டம் வழியுறுத்துகிறது.

அழைப்பாளர் ஐடி கட்டாயமா?
இப்படி செய்தால், கட்டாயம் பயனர்களின் தனியுரிமைப் பாதிக்கும் என்பதால், அழைப்பாளர் ஐடி கட்டாயமாக இருக்கக்கூடாது என்று இந்தியாவின் 3 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அரசின் உத்தரவை எதிர்த்துள்ளது.
பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நிறுவனங்கள் மிகவும் கவனமாக இருப்பது போல் தெரிகிறது.

காலிங் நேம் ப்ரெசன்ட்டேஷன் இந்தியர்களுக்கு முக்கியம்.!
இப்படி செய்தால், பயனர்களின் தனியுரிமை பாதிக்கும் என்பதால் அழைப்பாளர் ஐடி கட்டாயமாக இருக்கக்கூடாது என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நம்புகின்றன.
ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ஆகியவற்றை உள்ளடக்கிய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (COAI), பரிந்துரைக்கப்பட்ட காலிங் நேம் ப்ரெசன்ட்டேஷன் (Calling Name Presentation - CNAP) தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இலவசமாக செயல்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இதே விஷயத்தை தானே 'அந்த' ஆப்ஸ் செய்கிறது?
தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளில் காலிங் நேம் ப்ரெசன்ட்டேஷன் அறிமுகம் என்ற தலைப்பில் TRAI தனது ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்ட சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு COAI இன் எதிர்முனை முன்வைக்கப்பட்டது.
ட்ரூகாலர் போன்ற பயன்பாடுகளின் தேவையை முடிவுக்குக் கொண்டுவரும் அழைப்பாளர் ஐடியை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு டெலிகாம் ஆபரேட்டர்களிடம் இருந்து பதில்களைக் கோருகிறது.

ஓ.. காரணம் இது தானா? TRAI இன் யோசனைக்கு இது தான் அடித்தளம்.!
இந்தியாவின் 114.55 கோடி வயர்லெஸ் மற்றும் 2.65 கோடி வயர்லைன் சந்தாதாரர்களை ரோபோகால்கள், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடி அழைப்புகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான TRAI இன் தேடலில் இருந்து இந்த யோசனை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பரிந்துரைக்கப்பட்ட CNAP ஐ கட்டாயமாக்கும் அரசாங்கங்களின் முன்மொழிவை COAI ஒருமனதாக எதிர்த்ததாக PTI தெரிவித்துள்ளது.

ஜியோ அரசிடம் கூறிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
COAI இன் பகுதியான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் CNAP-ஐ இலவச-விருப்பத்தின் அடிப்படையில் பயன்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
இதில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் இந்த வசதியை வழங்கத் தேர்வு செய்யலாம்.
டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (TRAI) ஆலோசனையை ஜியோ, "சிஎன்ஏபி அல்லது கால்லர் ஐடி வசதிகள் துணை VAS சேவையைப் பெறுவது நல்லது" என்று ஜியோ பதிலளித்ததாக கூறப்படுகிறது.

இதுல இப்படி ஒரு சிக்கலும் இருக்கிறதா?
சிக்னல் லிங்க் மீதான அதிகரித்த சுமை மற்றும் தாமதம் மற்றும் ஒன்றோடொன்று தொடர்பான சிக்கல்களில் சாத்தியமான தாக்கம் போன்ற தொழில்நுட்ப வரம்புகளை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இன்னும் 2ஜி, 3ஜி, லேண்ட்லைன்கள் மற்றும் சிஎன்ஏபியை ஆதரிக்கும் திறன் இல்லாத ஃபீச்சர் போன்கள் போன்ற பழைய தொழில்நுட்பத்தையே நம்பியிருக்கிறார்கள் என்றும் ஜியோ கூறியுள்ளது.

3 நிறுவனங்களும் தனித்தனியாக கூறிய காரணங்கள்.!
இந்த விஷயத்தில் Vi இன் பதில்கள் ஜியோவைப் போலவே இருந்ததாக கூறப்படுகிறது. CNAP ஒரு LTE தொழில்நுட்பம், எனவே 4G தரநிலைக்கு முந்தைய தொழில்நுட்பத்தில் இதை செயல்படுத்த முடியாது என்று Vi தெளிவுபடுத்தியுள்ளது.
ஏர்டெல் நிறுவனமும் இதே பதிலை அளித்துள்ளது. CNAP கட்டாயப்படுத்தப்பட்டால் தனியுரிமை சமரசம் செய்யப்படும் என்று ஜியோ கூறியுள்ளது.
இத்தகைய அம்சத்தை கட்டாயமாகச் செயல்படுத்துவது விவாதத்திற்குரியது மற்றும் தவிர்க்கப்பட வேண்டும் என்று 3 நிறுவனங்களும் அரசின் உத்தரவை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுடன் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








