கனவுகள் மெய்ப்பட... புதிய சாம்சங் கேலக்ஸி மொபைல்கள்!

இந்த வகையில் கேலக்ஸி குடும்பத்தில் இருந்து இரண்டு ஸ்மார்ட்போன்களை உருவாக்கியுள்ளது சாம்சங்.
கேலக்ஸி ஒய் மற்றும் கேலக்ஸி டபிள்யூ என்ற பெயரில் வரும் இந்த புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் அதி நவீன தொழில் நுட்பங்களை கொடுக்கும் என்று பெரிதும் எதிர் பார்க்கபடுகிறது.
குவிந்து கிடக்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த புதிய கேலக்ஸி ஒய் மற்றும் டபிள்யூ என்ற பெயரில் புதிய கேலக்ஸி மொபைல்கள் ஒரு தனி சிறப்பை பெறும். இந்த சாம்சங் கேலக்ஸி ஒய் மொபைல் 3 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும்.
இதைவிட கேலக்ஸி டபிள்யூ மொபைல் சற்று அதிகமான திரையை கொண்டிருக்கும். இதில் 3.7 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்ளிகேஷன்களை இயக்குவதும், காட்சிகளையோ தெளிவாக பார்க்கவும் இது உதவும்.
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பொறுத்த வரையில் இந்த கேலக்ஸி ஒய் மற்றும் டபிள்யூ ஆகிய இரண்டு மொபைல்களுமே ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் இயங்குதளத்தில் இயங்கும்.
கேமராவில் கேலக்ஸி டபிள்யூ மொபைல் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டிருக்கும். ஆனால் சாம்சங் கேலக்ஸி வை மொபைல் 2.0 மெகா பிக்ஸல் கேமராவைமட்டுமே இருக்கும்.
இரண்டு மொபைல்களிலுமே 32ஜிபி வரை மெமரி திறனை அதிகரித்துக்கொள்ள ஏதுவாக சூப்பர் எக்ஸ்டர்னல் கார்டு
கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தேவையான முக்கிய தகவல்களை ஸ்டோர் செய்லாம். கேலக்ஸி ஒய் மொபைல் 2ஜி வசதியுடன் 17 மணி நேரம் டாக் டைமினையும் மற்றும் 850 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும்.
கேலக்ஸி டபிள்யூ மொபைலும் சிறந்த பேட்டரி பேக்கப் வசதியை பெற்று தருகிறது. சோஷியல் நெட்வொர்க் பற்றி கவலை வேண்டாம். இந்த இரண்டு மொபைல்களிலுமே புளூடூத் மற்றும் யூஎஸ்பி போர்ட் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி எளிதாக தகவல் பரிமாற்றம் செய்யலாம்.
கேலக்ஸி ஒய் மொபைல் ரூ.8,000க்கு குறைவான விலையில் கிடைக்கும் என்றும், கேலக்ஸி டபிள்யூ மொபைல் சற்று அதிகமான விலை கொண்டதாக இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








