ஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.!
செல்போனின் ரிங்கிங் நேரத்தை குறைத்தாக ஜியோ மீது அதிரடியாக புகாரை மற்ற டெலிகாம் நிறுவனங்கள் தெரிவித்து இருந்தன. இந்நிலையில், ஏர்டெல், வோடபோன்,ஐடியா நிறுவனங்கள் முறைகேடாக ஈடுபட்டுள்ளதாக ஜியோ டிராயிடம் புகார் தெரிவித்துள்ளது. இது பலிதீர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

ஜியோவில் ரிங்கிங் நேரம் குறைப்பு
ஜியோ நிறுவனம் தனது நிறுவன எண்களில் இருந்து பிற நிறுவன எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அவுட்கோயிங் அழைப்புகளுக்கான ஐயுசி கட்டணத்தை செலுத்துவதை தடுக்க ரிங்கிங் நேரத்தை குறைத்தாக டிராயிட் ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் குற்றம் சாட்டின.

போட்டியாக ரிங்கிங் நேரம் குறைப்பு
இந்நிலையில் ஜியோவுக்கு போட்டியாக மாற்ற நிறுவனங்களும் ரிங்கிங் நேரத்தை குறைத்தன. மேலும், ஐயுசி கட்டணத்தை செலுத்துவதை தடுக்க இதுபோன்று ஜியோ ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

பலி தீர்த்த ஜியோ:
இந்த நிறுவனங்களுக்கு பதிலடியாக ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், வோடபோன், ஏர்டெல் ஐடியா நிறுவனங்கள், தரைவழி இணைப்புகளை செல்போன் இணைப்புகளாக கணக்கு காட்டி முறைகேடாக வருவாய் ஈட்டுவதாகவும் ( undue enrichment புகார் தெரிவித்தன. அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் ஜியோ டிராயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏர்டெல் பதிலளித்தது
இது குறித்து ஏர்டெல் ஐயுசி கட்டணம் குறித்த முடிவை டிராய் எடுக்க இருக்கும் நிலையில், அந்த அமைப்பை குழப்ப ஜியோ முயற்சிப்பதாக ஏர்டெல் பதிலளித்துள்ளது.

டிராய் பதில் எப்போது
செல்போன் சேவையளிக்கும் நிறுவனங்களுக்கு இடையே மோதல் வலுத்தள்ள நிலையில், ரிங்கிங் நேரம் குறித்து 2 வாரங்களில் டிராய் முடிவெடுக்க இருப்பதாகவும் டிராய் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








