Home
News

குருநாதா உனக்கு இப்படியொரு சோதனையா? மிகப் பெரிய இழப்பை அறிவித்தது ஏர்டெல்.!

ஜியோ, வோடபோன், பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ஜியோ நிறுவனம் கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது,ஆனால் ஏர்டெல் நிறுவனம் வரம்பற்ற கால் அழைப்புகளை வழங்கி வருகிறது.

கட்டணங்களுக்காக 5

இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் நான்காவது காலாண்டில் ஒரு மிகப் பெரிய இழப்பை அறிவித்துள்ளது. அது என்னவென்றால்,
ஒரு முறை ஸ்பெக்ட்ரம் கட்டணங்களுக்காக 56.42 பில்லியன் இந்திய ரூபாயை (744.90 மில்லியன் டாலர்) ஒதுக்கிய பின்னர் இந்திய தொலைத் தொடர்பு ஆபரேட்டரான பாரதி ஏர்டெல் லிமிடெட், இந்த இழப்பை அறிவித்துள்ளது.

 ரூபாய் இழப்பை பதிவு செய்துள்ளது

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான இந்நிறுவனம், கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் 52.37பில்லியன் ரூபாய் இழப்பை பதிவு செய்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 1.07 பில்லியன் ரூபாய் லாபத்துடன் இருந்தது. இருப்பினும், தொலைதொடர்பு நிறுவனத்தின் இந்தியா மொபைல் சேவை வணிகத்தில் ஒரு பயனருக்கு காலாண்டு சராசரி வருவாய் 25% உயர்ந்து 154 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 வயர்லெஸ் கேரியர்கள் 920பில்லியன்

அதாவது வயர்லெஸ் கேரியர்கள் 920பில்லியன் இந்திய ரூபாயை (12.11 பில்லியன் டாலர்) தாமதமாக வசூலிக்கும் வட்டிக்கும் செலுத்த வேண்டும் என்ற இந்திய தொலைத் தொடர்புத் துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததை அடுத்து இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டு பிற்பகுதியில் தங்கள் கட்டணங்களை உயர்த்தின என்பது குறிப்பிடத்தக்கது.

 மார்ச் 31-ம் தேதியுடன்

இருந்தபோதிலும் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் மொத்த வருவாய் 15% உயர்ந்து 237.23 பில்லியன் ரூபாயாகஉள்ளது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதிகரிப்பு காணப்பட்டதாக பார

கோரோனா தொற்றுநோய்களின் போது தரவு போக்குவரத்தில் அதிகரிப்பு காணப்பட்டதாக பாரதி ஏர்டெல் குறிப்பிட்ட போதிலும் இந்த இழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ன்றால், மார்ச் மாத இறுதியில் கடுமையான பூட்டுதலை விதி

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், மார்ச் மாத இறுதியில் கடுமையான பூட்டுதலை விதிக்க இந்திய அரசாங்கத்தை தூண்டப்பட்ட நிலையில், நாட்டில் இணைய சேவைகளின் தேவை அதிகரிக்க துவங்கியது என்பது அனைவரும் தெரிந்ததே.

News Source:deccanchronicle.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel reports fourth-quarter loss of Rs 52.37 billion and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X