Home
News

மகாபிரபு இங்கேயும் வந்துட்டீங்களா? ஆடைத் தொழிலாளர்களின் தலையில் கேமரா.. எதற்கு தெரியுமா?

உலகம் முழுவதும் ஏஐ (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது.அதுவும் பல துறைகளில் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வேலைவாய்ப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக ஏஐ வந்தால் வேலைகள் போய்விடுமா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

அதுவும் முதலில், automation காரணமாக சில வேலைகள் குறைந்து வருகிறது. குறிப்பாக ஒரே மாதிரியான (repetitive) வேலைகளை ஏஐ எளிதாகச் செய்து விடுகிறது. இதனால் அந்த வேலைகளில் இருந்தவர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகிறது. அதேபோல், பல நிறுவனங்கள் மனிதர்களுக்குப் பதிலாக chatbots மற்றும் software-களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் customer support போன்ற வேலைகள் குறைந்து வருகிறது.

ஆடைத் தொழிலாளர்களின் தலையில் கேமரா.. எதற்கு தெரியுமா?

ஆனால் உண்மையில் எல்லா வேலைகளும் அழிந்து விடவில்லை. சில வேலைகள் மட்டும் மாறுகிறது. அதே சமயம், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகி வருகிறது. இந்நிலையில் ஆடை தொழிலாளர்கள் தலையில் கேமராக்களுடன் காணப்படும் வைரல் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளன.

அதாவது பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் போல் தோற்றமளிக்கும் இடங்களில் படமாக்கப்பட்ட இந்த வீடியோ துணிகளைத் தைப்பதும் கையாளுவதும், அவர்களின் அசைவுகளைப் பதிவு செய்யப்படுவதும் போலத் தெரிகிறது. எனவே இது செயற்கை நுண்ணறிவு பயிற்சி மற்றும் பணிகளைத் தானியக்கமாக்குவதில் அவற்றின் சாத்தியமான பயன்பாடு குறித்த யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

அதாவது திறமையான தொழிலாளர்களின் நேரடிக் காட்சிகளைப் பதிவு செய்ய இந்த கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பலர் கூறி வருகின்றனர். இந்த வீடியோ தரவை செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கோ அல்லது ரோபோக்களுக்கோ பயிற்சி அளிக்கப் பயன்படுத்தலாம் என சில பயனர்கள் கூறியுள்ளனர்.

இதுபோன்ற விலை உயர்ந்த அசைவு பதிவு தொழில்நுட்பத்தைத் தேவையின்றி, ஆடை உற்பத்தியில் ஈடுபடும் சிக்கலான கை அசைவுகளை இயந்திரங்கள் கற்றுக்கொள்ள முடியும் என்பதே இதன் பின்னணியில் உள்ள யோசனையாகும்.

ஆடைத் தொழிலாளர்களின் தலையில் கேமரா.. எதற்கு தெரியுமா?

தற்போது இந்த வீடியோ நாட்டில் வேலை பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. தொழிலாளர்கள் தங்களுக்குப் பதிலாக வரக்கூடிய தொழில்நுட்பங்களுக்குப் பங்களிக்கக்கூடும் என்று பல்வேறு பயனர்கள் அஞ்சுகின்றனர். அதேபோல் தொழிலாளர்களின் பதிவுசெய்யப்பட்ட இந்த வீடியோ தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து அவர்களுக்கு முழுமையாகத் தெரிவிக்கப்படுகிறதா என்றும், அதற்காக அவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பி, சில விமர்சகர்கள் வெளிப்படைத்தன்மைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்பு கூறியது போல் உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதுவும் இந்த ஏஐ தொழில்நுட்ப வசதி ஆனது பல்வேறு சிக்கலான வேலைகளையும் சுலபமாகச் செய்துதர உதவுகிறது. ஆனாலும் இந்த ஏஐ ஏஐ தொழில்நுட்பம் என்பது மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்துவிடக்கூடாது, மாறாக அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும்.

photos credits:X, indiatoday

source:1

More from GizBot

Best Mobiles in India

English summary
Indian workers filmed training AI, and people are worried about what comes next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X