Just In
- 4 hrs ago 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- 5 hrs ago Telegram பயனர்களுக்கு இலவச பிரீமியம்.. ஆனா ஆப்பு உறுதி.. மறைமுகமாக இருக்கும் சிக்கல்.. என்ன தெரியுமா?
- 6 hrs ago அதிரடி காட்டிய நோக்கியா.. கம்மி பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 128GB மெமரி.. எந்த மாடல்?
- 7 hrs ago அதிர்ச்சி தந்த ஆராய்ச்சி.. ப்ளூடூத் யூஸ் பண்ணுறீங்களா? அப்போ இதை கவனியுங்க.. உடல் விளைவுகளால் சிக்கல்..
Don't Miss
- Sports இதுதான் தோனியின் பவர்.. பார்த்த உடன் மிரண்டு போன மும்பை லாபி.. சிஎஸ்கே மேட்ச்சில் என்ன நடந்தது?
- Automobiles குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
- News பெரிய ரிஸ்க் எடுத்த காங்கிரஸ்.. மயிலாடுதுறையில் இந்த முறை சுதா போட்டி.. மணிசங்கர் ஐயர் தொகுதியாச்சே
- Movies Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
2023 வேதனை: சில கம்ப்யூட்டர்களில் Chrome சேவையை நிறுத்தும் கூகுள்: ஏன்?
கூகுள் குரோம்-ஐ உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கணினி மற்றும் போன்களில் இந்த கூகுள் குரோம்-ஐ பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் என்றே கூறலாம். இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது புதிய குரோம் பதிப்பை வரும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியிட உள்ளது.
பழைய பதிப்பு
மேலும் குரோம் புதிய பதிப்பு வெளியிடும் போது, பழைய பதிப்புகளை சில கம்ப்யூட்டர்களில் கூகுள் நிறுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இனி விண்டோஸ் 7, விண்டோஸ் 8.1 ஆகிய இயங்குதளங்களைக் கொண்ட கம்ப்யூட்டர்களில் கூகுள் குரோம் இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.
நினைச்சத விட கம்மி விலை.. OnePlus 11 5G அறிமுகமானது.. இந்திய விற்பனை சும்மா பிச்சுக்க போகுது!
பெயரளவில் மட்டும் தான்..
அதேபோல் விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்கும் கம்ப்யூட்டர்களில் இனி கூகுள் குரோம் ஆனது பெயரளவில் மட்டும் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைரஸ் இணையதளங்கள் இருந்தாலோ அல்லது வேறு ஏதும் சிக்கலான வலைத்தளம் சென்றாலோ கூகுள் குரோம் அவற்றைத் தடுத்து நிறுத்தாது. எனவே பழைய இயங்குதளத்தை நீங்கள் இன்னும் பயன்படுத்தி வந்தால் உடனே புதிய விண்டோஸ்-க்கு மாறும்படி பரிந்துரைக்கப்படுகிறது..
இதுதான் பொங்கல் பரிசு: புதிய ஸ்மார்போனை அறிமுகம் செய்த கையோடு தள்ளுபடி வழங்கிய Samsung.!
புரட்சியை ஏற்படுத்தியது
குறிப்பாக இந்த விண்டோஸ் 7 இயங்குதளம் ஆனது ஒரு காலத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அதாவது இந்த விண்டோஸ் 7 இயங்குதளம் ஆனது கடந்த 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அனைவரும் இணையத்தை எளிமையாகப் பயன்படுத்த இந்த விண்டோஸ் 7 இயங்குதளம் அருமையாக உதவியது. பின்பு விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 10, விண்டோஸ் 11 என எல்லாம் வந்து விட்டது.
விண்டோஸ் 7..
ஆனாலும் இன்று வரை பலரும் இந்த விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் கடந்த ஜூன் மாதம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோளர் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோளர்-க்கு பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுசு வந்ததும் பழசு விலை குறைப்பு: ரூ.74,999 Samsung போனை மிட்-ரேன்ஜ் விலையில் வாங்கலாம்!
சுருக்கமாக கூறவேண்டும் என்றால், பிரபல மென்பெருள்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதால், அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்களும் தங்கள் கணினியைப் அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல் கூகுள் நிறுவனம் ஒரு புத்தம் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரூ.400 கோடி மதிப்புள்ள வாட்ச் சொந்தக்காரர் நீங்களா? உலகின் விலை உயர்ந்த டாப் 8 கைக்கடிகாரம்!
கையெழுத்து?
அதாவது நீங்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது, மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் அவரின் கையெழுத்து நமக்குப் புரிந்திருக்கிறதா? அல்லது நமக்குப் புரியக்கூடாது என்பதற்காகவே இப்படி எழுதுகிறார்கள்? இப்படியெல்லாம் உங்களுக்குக் கண்டிப்பாகத் தோன்றியிருக்கலாம். இனிமேல் அந்த கவலை உங்களுக்கு இருக்காது.
மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துச் சீட்டில் இருக்கும் மருந்துகளின் பெயர்களை இனிமேல் எளிமையாகத் தெரிந்துகொள்ளும் புதிய அம்சத்தைக் கூகுள் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. கண்டிப்பாக நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
கூகுள் ஃபார் இந்தியா
கூகுள் நிறுவனத்தின் நடத்திய கூகுள் ஃபார் இந்தியா என்ற வருடாந்திர நிகழ்வில் புதிய கூகுளின் அம்சங்களைக் குறித்து அறிவித்துள்ளது. அதேபோல் இந்த நிகழ்வில் மருத்துவர்களின் மருந்துச்சீட்டை அறிந்து கொள்ளும் ஆர்ட்ஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (Artificial Intelligence) மற்றும் மெஷின் லேர்னிங் (Machine Learning) மாடல் குறித்து கூகுள் வேலை செய்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த புதிய அம்சம் ஆராய்ச்சியில் இருப்பதாகவும், இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தவில்லை என்றும் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த புதிய அம்சம் பயன்பாட்டுக்கு வரும்போது, மருந்துச்சீட்டை புகைப்படம் எடுத்தோ அல்லது கேலரியில் இருக்கும் புகைப்படத்தை எடுத்தோ, அதைக் கூகுள் ஆப்பிள் பதிவிடும் போது,என்னென்ன மருந்துகள் எழுதப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470