பான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு: கடைசி தேதி இதுதான்.! இணைக்கப்படாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்.!
சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி, ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 2022 வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. குறிப்பாக பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு பலமுறை கால கெடுவை நீட்டித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை இந்த கெடு தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்-பான் கார்டு இணைக்கப்படாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஏற்கனவே வருமான வரித்துறை, பான் என்னுடன் ஆதார் இணைக்கப்படாவிட்டால் பான் எண் செயல்படாதது என்று அறிவிக்கப்படும் என்று அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளிவந்த அறிவிப்பில் அத்தகைய பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரி சட்டத்தின் கீழ் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வருமான வரிதுறை தெளிவாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த முறை நிர்ணயிக்கப்பட்டுள்ள கெடு தேதிக்குள் பான் கார்ட் பயன்படுத்தி வரும் பயனர்கள் அதனை ஆதார் உடன் இணைக்க தவறினால் அவர்களது பான் கார்ட் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்படி முடக்கப்படும் பான் கார்டை பயன்படுத்தினால் வருமானவரித்துறைக்கு ரூ.10000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆதார் மற்றும் பான் கார்டை இதுவரை இணைக்காதவர்கள் இந்த லிங்கை
https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar பயன்படுத்தி அதனை இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வருமான வரித்துறையின் வலைதளம் மூலம் பான் எண் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வழிமுறை-1
முதலில் ஆன்லைன் வழியாக வருமான வரித்துரையின் அதிகாரபூர்வமான இ-ஃபில்லிங் வலைத்தளத்திற்குள்(https://www.incometaxindiaefiling.gov.in)செல்ல வேணடும்.

வழிமுறை-2
அடுத்து வலைதளத்தின் இடது பக்கதில் உள்ள Link Aadhaar எனும் விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3
அதன்பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் விவரங்களை கேட்குமொரு பக்கத்திற்குள் நுழைவீர்கள். அங்கேபான், ஆதார் எண் மற்றும் ஆதாரில் குறிப்பிட்டுள்ளதை போன்ற பெயர் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

வழிமுறை-4
பின்னர் I have only year of birth in Aadhaar card என்ற விருப்பமும், அதன் அருகில் ஒரு டிக் பாக்ஸ் ஒன்றும் இருக்கும். இது உங்களின் ஆதார் அட்டையில் நீங்கள் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பின்
அந்த டிக் பாக்ஸை கிளிக் செய்தல் வேண்டும்.

வழிமுறை-5
அதன்பின்பு வலைதள பக்கத்தில் இருக்கும் Captcha code-ஐ நிரப்பவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல்எண்ணிற்கு ஒடிபி ஒன்றை அனுப்பச் சொல்லியும் நீங்கள் கோரிக்கை விடுக்கலாம். கடைசியாக எல்லாம் முடிந்த பின்னர் Link Aadhaar என்பதை கிளிக் செய்தல் வேண்டும்.


Click it and Unblock the Notifications








