ரூ.1500க்கு 4ஜி போன்கள்- எப்படி,எப்போது?
விரைவில் ரூ.1500க்கு 4ஜி போன்கள்-எப்படி,எப்போது?
தற்போது ஸ்மார்ட்போன் தேவை அதிகமாக உள்ளது. மேலும் மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பணிகளை செய்ய ஸ்மார்ட்போன் அதிகமாக உதவுகிறது. மேலும் ஸ்மார்ட்போன்கள் பொருத்தமாட்டில் விலை தான் மிக உயர்வாக உள்ளது.
சீன மொபைல் சிப் ஸ்ப்ரெட்ட்ரோம் கம்யூனிகேஷன்ஸ் கூறுகையில் ஸ்மார்ட்போன் தற்போதைய விலைகளில் இருந்து குறைந்தபட்சம் அரைவாசி விலைகள் கண்டிப்பாக குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.

1,500 ரூபாய் :
1,500 ரூபாய் 4ஜி சேவை பெறக்கூடிய பியூச்சர் போன் எனப்படும் சாதாரண போன்களை தயாரித்து வெளியிட உள்ளதாக கடந்த ஜனவரியில் தகவல்கள் வெளியாகின. ஆனால்து,குறித்து முறையான அறிவிப்பு தற்போது வரை வரவில்லை.

லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ்:
லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ், கார்பன் போன்ற 4ஜி போன்களின் ஆரம்பவிலை 3,000 ஆக உள்ளது. மேலும் இவற்றின் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜியோ நிறுவனம்:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜிவோல்ட் ஸ்மார்ட்போன்களை மிக குறைந்த விலையான 1,500 ரூபாய் மற்றும் 999 ரூபாய்க்கு விற்ப்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஸ்ப்ரெட்ட்ரோம் கம்யூனிகேஷன்ஸ்:
ஷாங்காய் சார்ந்த ஸ்ப்ரெட்ட்ரோம் கம்யூனிகேஷன்ஸ், நிலையான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. தற்போது இது மீடியா டெக் மற்றும் குவால்காம் போன்ற மொபைல் சிப் தயாரிப்பாளர்களுடன் மிகப்பெரிய போட்டியை உருவாக்கியுள்ளது. மேலும் சிப்செட் சாதனம் விலையை குறைக்க முயற்ச்சி செய்துவருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஸ்ப்ரெட்ட்ரோம் கம்யூனிகேஷன்ஸ் பி.எஸ்.இ. -0.43 சதவீதத்துடன் இரண்டு வருட ஒப்பந்தம் செய்துள்ளது, மேலும் இவை ஸ்மாரட்போன்களின் விலையை குறைத்து மிகப்பெரிய மாற்றத்ததை ஏற்ப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4ஜி ஸ்மார்ட்போன்கள்;
தற்போது உள்நாட்டு தயாரிப்பிலேயே குறைந்த விலையிலான 4ஜி ஸ்மார்ட்போன்கள் சுமார் ரூ.3,000க்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளன.. எனவே இதில் பாதி விலையான 1,500 ரூபாய்க்கு 4ஜி போன் விரைவில் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

ஜேபி மோர்கன்:
ஜேபி மோர்கன் தனது சமீபத்திய கண்டுபிடிப்பில் 4ஜி திறன்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தைகொண்டுவரும் எனக்கூறியிருந்தார்.

3ஜில் இருந்து 4ஜி:
இந்தியுயாவில் கடந்த கடந்த ஆறு மாதங்களில் மொபைல் சந்தையில் 3ஜில் இருந்து 4ஜி ஆக மாறிவிட்டது, மேலும் மொபைல் விற்ப்பனையில் மிகப்பெரிய மாற்றத்ததைக் கொண்டுவந்துள்ளது. கிராமப்புறங்களிலும் கூட ஸ்மாரட்போன்கள் அதிகமாக விற்ப்பனை செய்யப்படுகின்றன.

4ஜிசேவை:
ஏர்டெல் மற்றும் ஜியோ, ஐடியா போன்ற நிறுவனங்கள் அதிகமாக 4ஜி சேவைகளை வழங்குகிறது. மேலும் பல்வேறு கட்டணக்குறைப்பு சலுகையை வழங்குகிறது. எனவே கூடியவிரைவில் ரூ.1500க்கு 4ஜி போன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








