Home
News

பெற்றோர்கள் கவனத்திற்க்கு!! குழந்தைகளின் செக்ஸ் சாட்!!

By Prabakaran

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் நமக்கு நிறைய நன்மைகளை தந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இப்பொழுதில் மொபைல்களில் போட்டோ எடுப்பது மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக உள்ளது.

போட்டோ எடுப்பது அதை மற்றவர்களிடத்தில் பகிர்ந்துகொள்வது இது போன்ற செயல்களுக்கு தான் இன்றைய கேமரா மொபைல்கள் அதிகம் பயன்படுகின்றன. வீட்டில் குழந்தைகளின் செய்கைகளை போட்டோ எடுப்பது குடும்பத்தாரை போட்டோ எடுப்பது அதை உறவுக்காரர்களிடம் பகிர்ந்து கொள்வது என இதில் நல்ல பயன்கள் உள்ளன.

அதே போல் இதில் தீமைகளும் இப்பொழுது அதிகரித்து உள்ளது. இன்று மொபைல்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் செக்ஸ்டிங்(sexting) எனப்படும் செக்ஸ் சாட் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. நமது குழந்தைகள் என்று வரும் பொழுது பெற்றோர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் என்ன செய்கிறார்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள் எப்படி இருக்கிறது, அவர்களின் எப்படி உள்ளது ஆகியவைகளை தெரிந்துகொள்வது பெற்றோர்களின் கடமை. இந்த செக்ஸ்டிங் எனப்படும் செக்ஸ் சாட் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்

மொபைல்

மொபைல்

குழந்தைகள் போன்களில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி கொள்வது அல்லது ஆபாசமான போட்டோக்களை பரிமாறிக்கொள்வது இவைகளே செக்ஸ்டிங் எனப்படும் செக்ஸ் சாட் ஆகும்.

மொபைல்

மொபைல்

சராசரியாக 13 வயது முதல் குழந்தைகளிடம் இந்த செக்ஸ் சாட் பழக்கம் தொடங்குகிறது. செல்போன் பயன்படுத்தும் 6 டீன் ஏஜ் குழந்தைகளில் 1 குழந்தை ஆடை இல்லாத போட்டோ அறைகுறை ஆடை போட்டோக்களை பரிமாறிக்கொள்கின்றனர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

மொபைல்

மொபைல்

13-19 வயது உடைய டீன் ஏஜ் குழந்தைகளில் 20 சதவீதமும், 20-26 வயது உடைய இளைஞர்களில் 33 சதவீதமும் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களாம்.

மொபைல்

மொபைல்

13-16 வயது உடைய டீன் ஏஜ் குழந்தைகளில் பெண் குழந்தைகளே அதிகம் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களாம். கிட்டதிட்ட 11 சதவீத பெண் குழந்தைகள் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மொபைல்

மொபைல்

இதில் ஆபத்தான விஷியம் என்வென்றால் தங்களுடைய ஆடை இல்லாத போட்டோக்கள் அல்லது அறைகுறை ஆடை உடைய போட்டோக்களையே டீன் ஏஜ் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பரிமாறிக்கொள்கின்றனர்.

மொபைல்

மொபைல்

இதில் 51 சதவீத பெண்கள் ஆண்களின் வற்புறுத்தலால் இவ்வாறு செய்கின்றார்களாம். இந்த கலாச்சாரம் அபாயகரமான விஷியமாகும்.

மொபைல்

மொபைல்

பெற்றோர்கள் குழந்தைகள் மேல் அக்கறை கொண்டு அவர்களை கவனிக்க வேண்டும். அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா இல்லையா அல்லது போன்களில் என்பவைகளை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

மொபைல்

மொபைல்

ஒரு வேலை குழந்தைகள் இது போன்று செயல்களில் ஈடுபடுவது உங்களுக்கு தெரிந்தால் அவர்களிடம் பக்குவமாக இதன் விளைவுகளை பெற்றோர்கள் புரிய வைக்க வேண்டும்.

மொபைல்

மொபைல்

யாரிடம் இந்த போட்டோக்களை பகிர்ந்து கொளகிறார்களோ அவர்கள் இந்த போட்டோவை மற்றவர்களியடம் பரப்பவதற்க்கு வாய்ப்பு உள்ளது இது ஆபத்தானது என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

மொபைல்

மொபைல்

சில கிரிமினல்கள் இந்த போட்டோக்களை ஆபாச இணையதளத்தில் வெளியிடும் அபாயமும் உள்ளது அதையும் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.

மொபைல்

மொபைல்

இதோடு மட்டும்மல்லாமல் பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்க எண்ணிணால், குழந்தைகள் போன்களில் அனுப்பும் மெசேஜ்கள் அறிய சில புரோகிராம் அப்ளிகேஷன்களை பெற்றோர்கள் பயன்படுத்தலாம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X