உலகின் முதல் 5ஜி சேவை பெறும் மாவட்டம் இதுதான்.!
இந்நிலையில் 5ஜி நெடவொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறும் உலகின் முதல் மாவட்டமாக ஷாங்காய் இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இடங்களிலும் 5ஜி சேவையை பற்றி தான் அதிகமாக பேசப்படுகிறது, காரணம் அதிவேக இணையம் கொண்டு இந்த சேவை வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில் 5ஜி நெடவொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறும் உலகின் முதல் மாவட்டமாக ஷாங்காய் இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும்
மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும 5ஜி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாக இருக்கும் என்றும், பின்பு தற்போதை
4ஜி எல்டிஇ நெட்வொர்க்களை விட 5ஜி சேவையை பயன்படுத்தும்போது டவுன்லோடு வேகம் 100மடங்கு அதிவேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக ஷாங்காய் மாவட்டத்தில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா மொபைல் சார்ந்து 5ஜி நெட்வொர்க் சோதனை
ஷாங்காயின் ஹாங்கௌவில் துவங்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தான் கடந்த மூன்று மாதங்களாக 5ஜி பேஸ் ஸ்டேஷன்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சேவையை துவங்கி வைத்த ஷாங்காய் மாவட்ட வு கிங் என்பவர் 5ஜி சேவையில் முதல் வீடியோ கால் மேற்கொண்டார், இதற்கு அவர் அவர் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, பின்பு 5ஜி சீராக இயங்கு துவங்கும் போது பயனர்கள் தங்களது சிம் கார்டுகளை அப்டேட் செய்யாமல் புதிய நெட்வொர்க் சேவையை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2033 ஆம் ஆண்டில் மனிதர்களைச் செவ்வாயில் தரையிறக்கும் நாசா.!
ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவையை பயன்படுத்த வேண்டாம் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications