Just In
- 5 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 5 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 6 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- 7 hrs ago ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
Don't Miss
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பேரழிவு : அடுத்த நொடி கூட ஏற்படலாம்..!
புயல், சூறாவெளி, பூகம்பம், சுனாமி என ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு இயற்கை பேரழிவு நடந்து கொண்டே தான் இருக்கின்றது. சில இடங்களில் கணிக்கப்பட்டதை விட அதிக நிகழ்வுகளும், பாதிப்புகளும் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டுக்கு, 2014-ஆம் ஆண்டு நடக்கலாம் என்ற கணிப்பின்படி நிகழ்ந்த ஐஸ்லாந்தில் உள்ள பரோர்புங்கா எரிமலை வெடிப்பு..!
உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!
அப்படியாக புவியியல் அறிவியலாளர்களும், விஞ்ஞானிகளும் குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் 'நிகழலாம்' என்று கணிக்கப்பட்ட இயற்கை பேரழிவுகள் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன.
அடுத்த நொடி :
கணிக்கப்பட்டுள்ள சில பேரழிவுகள் அடுத்த நொடி தொடங்கி 2100-ஆம் வரையிலாக எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முக்கியமாக, வரலாறு காணாத சுனாமி எந்த நொடியிலும் ஏற்படலாம் என்றும் கணிக்கபட்டுள்ளது.
காட்டுத்தீ :
2015 தொடங்கி 2050-ஆம் ஆண்டுக்குள், அமெரிக்காவில் பலமுறை பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சுற்றுசூழல் விஞ்ஞானிகள் :
ஹார்வர்ட் ஸ்கூல் பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் மையத்தை சேர்ந்த சுற்றுசூழல் விஞ்ஞானிகள் இதை கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 மடங்கு :
கடந்த 1999-ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்கள், 3 மடங்கு அதிகரித்து உள்ளது என்கிறது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்.
நிலநடுக்கம் :
2015 தொடங்கி 2065-ஆம் ஆண்டுக்குள், சிலி நாட்டில் நீள் ஊடுருவு நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காரணம் :
கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, 8.2 என்ற ரிக்டர் அளவில் அங்கு நிகழ்ந்த நிலநடுக்கம் தான் அடுத்த நிகழப்போகும் நிலநடுக்க கணிப்பிற்க்கு காரணமாகும்.
இரட்டை நிலநடுக்கம் :
2017-ஆம் ஆண்டில், ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்டத்தை போன்றே பயங்கரமான நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் மசாக்கி கிமுரா :
நில அதிர்வு மற்றும் நீர்மூழ்கி நிலவியல் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆன டாக்டர். மசாக்கி கிமுரா என்பவர் இதை கணித்துள்ளார்.
ரிக்டர் அளவு :
மேலும் பேராசிரியர் மசாக்கி கிமுரா கூற்றின்படி ஏற்படப்போகும் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு கோள் 9.0 இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எரிமலை சீற்றம் :
2015 தொடங்கி 2053-ஆம் ஆண்டுக்குள், ஜப்பானில் உள்ள மவுண்ட் ஃபூஜி எரிமலையில் சீற்றம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிலை :
ஜப்பானில் உள்ள 110 எரிமலைகளில், 20 எரிமலைகள் எப்போது வேண்டுமானால் என்கிற நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
75 ஆயிரம் மக்கள் :
அதில் கணிக்கப்பட்டுள்ள 12,380 அடி உயரம் கொண்ட எரிமலையான மவுண்ட் ஃபூஜியில் சீற்றம் ஏற்பட்டால் சுமார் 75 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கம்-சுனாமி :
2015 தொடங்கி 2065-ஆம் ஆண்டுக்குள், ஓரிகனில் நிலநடுக்கம் - சுனாமி பிளவு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
150 வல்லுநர்கள் :
ஓரிகன் நாட்டை சேர்ந்த நிலஅதிர்வு பாதுகாப்பு கொள்கை ஆலோசனை ஆணையத்தின் 150 வல்லுநர்களின் கணிப்புபடி அங்கு நிலநடுக்கத்தோடு சேர்த்து சுனாமியும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
நில அதிர்வு :
ரிக்டர் அளவு கோளில் சுமார் 8.0 முதல் 9.0 வரை நில அதிர்வு பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 10,000 மக்கள் :
இன்னும் 50 ஆண்டுகளில் நிகழக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள இந்த இயற்கை பேரழிவு ஏற்பட்டால், சுமார் 10,000 மக்கள் வரை கொல்லப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூழ்கடிப்பு :
2015 தொடங்கி 2100-ஆம் ஆண்டுக்குள், அமெரிக்க கிழக்கு கடற்கரை மூழ்கடிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் :
தற்போதைய கடல் மட்ட அளவின்படி, 2050-ஆம் ஆண்டுக்குள்ளேயே நகரின் முக்கிய பகுதிகள் கடலுக்குள் சென்று விடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
72 சென்டிமீட்டர் :
மேலும் 2050-ஆம் ஆண்டுக்குள், அமெரிக்காவின் நியூயார்க் கடல் மட்ட அளவு சுமார் 72 சென்டிமீட்டர் வரை உயரலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது
வரலாறு காணாத பெரும் சுனாமி :
குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஏற்படலாம் என்று கணிக்க முடியாத கரீபியன் சுனாமி.
கும்ப்ரே வீஜா எரிமலை :
கேனரி தீவில் உள்ள கும்ப்ரே வீஜா எரிமலை தான் இதுவரை ஏற்பட்ட சுனாமிகளிலேயே மிகவும் பெரிய சுனாமியை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சுனாமி பேரலைகள் :
இந்த இயற்கை பேரழிவு நடந்தால், அதனால் ஏற்படும் சுனாமி பேரலைகள் சுமார் 800 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து கரையை அடையும் போது சுமார் 330 அடி உயர அலைகளாய் எழும்பும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தாக்கும் :
இந்த சுனாமி இங்கிலாந்து, ஃப்ளோரிடா, கரீபியன் ஆகிய பிரதேசங்களையும் அதிகம் தாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மாபெரும் நிலநடுக்கம் :
2015 தொடங்கி 2045-ஆம் ஆண்டுக்குள், கலிபோர்னியாவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு :
மேலும் அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.0 என்று பதிவாகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
30% வாய்ப்பு :
எதிர்பார்ககப்படும் இந்த நிலநடுக்கமானது அடுத்த 7 ஆண்டுகளுக்குள் நிகழ 30% வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மாபெரும் சூரியப்புயல் :
2015 தொடங்கி 2025-ஆம் ஆண்டுக்குள், மாபெரும் சூரியப்புயல் பூமியை தாக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு :
கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட சூரியப்புயல்களை ஆய்வு செய்ததின் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் சூரிய புயல் ஏற்படுவதற்க்கான வாய்ப்பு 12% என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பூமியை தாக்கினால் :
சூரியப்புயல் ஏற்பட்டு பூமியை தாக்கினால் ரேடியோ, ஜிபிஎஸ், செயற்கைகோள் தொடர்பு மட்டுமில்லாது பூமியில் உள்ள லட்சக்கணக்கான எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களும் பாதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் கிஸ்பாட் :
மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470