எளிமையான கேள்விகளுக்கு கூகுளை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில்..?
உங்கள் குழந்தைகளோ அல்லது உங்கள் நண்பர்களோ கேட்கும் சின்ன சின்ன கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் 'கூகுள் சர்ச்' செய்து பார்க்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள்..? ஆம் என்றால் கவலை வேண்டாம், ஏனெனில் நீங்கள் மட்டும் அப்படி செய்யவில்லை, நம்மில் பலரும் அதைத்தான் செய்கின்றனர்.

நம் மன வலிமையை கொஞ்சம் கூட பயன்படுத்தாமல் அனைத்து தேடல்களுக்கும் கூகுளை அணுகுவது மிகவும் மோசமான செயல் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவு படுத்தியுள்ளது. இந்த ஆய்வை நிகழ்த்தியது வாட்டர்லூ பல்கலைகழகத்தை (University of Waterloo) சேரந்த பேராசிரியர் இவன் எஃப்.ரிஸ்கோ (Evan F. Risko) என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்டர்நெட் வசதி கையில் இருக்கும் போது மட்டும் தான், மக்கள் கொஞ்சமாவது விவரம் தெரிந்தவர்கள் போல நடந்து கொள்கின்றனர், அதே நேரம் இன்டர்நெட் வசதி கையில் இல்லையெனில் பெரும்பாலும் கருத்து உரைக்கும் பண்பை குறைத்துக் கொள்கின்றனர் என்றும் அந்த ஆய்வு விளக்கமளிக்கிறது.

சுமார் 100 பேரை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பாதி பேருக்கு இன்டர்நெட் வசதி அளிக்கப்பட்டு இருந்தது, மீதமுள்ளோருக்கு வழங்கப்படவில்லை. இந்த இரண்டு பிரிவினரையும் வைத்து நடத்தப்பட்ட ஆய்வின்படி இன்டர்நெட் வசதி உள்ளவர்களுடன் ஒப்பிடும் போது இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் தான் அதிக அறிவு கொண்டவர்களாய் இருந்துள்ளனர். அதாவது, கேள்விக்கான பதில் தெரிந்த போதிலும் கூட (அது சரியான பதிலாகவோ அல்லது தவறான பதிலாகவோ இருக்கலாம், இருப்பினும்) அதை இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் வெளிப்படுத்த தவறுகின்றனர்.

இதன் மூலம் நமக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்பதில் முடிவுநாம் எடுக்கும் முடிவு சார்ந்த திறனை கூகுள் சர்ச் முழுமையாக பாதிக்கிறது என்கிறது இந்த ஆய்வு.
மேலும் படிக்க :
கூகுள் மறைக்கும் 'ரகசியங்கள்'..!
வெளியானது : பாதுகாக்கப்பட்ட கூகுள் 'ரகசியங்கள்'..!
ரூ.783-க்கு விலை போனது கூகுள்..!
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications