Just In
- 15 min ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 44 min ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 1 hr ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 3 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குற்றங்களில் இருந்து குடிமக்களை காப்பாற்றுமா - சைபர் ஸ்வட்சே கேந்திரா.?
சைபர் ஸ்வாச்டா கேந்த்ரா: கம்ப்யூட்டர் குற்றங்களை தடுக்கும் CERTயின் புதிய அமைப்பு
கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் பயன்பாடுகள் அதிகரித்து வருவது போலவே சைபர் க்ரைமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சைபர் குற்றங்களை தடுக்க இந்திய அரசு CERT என்பதன் மூலம் 'சைபர் ஸ்வாச்டா கேந்த்ரா என்ற அமைப்பை தொடங்கியுள்ளது. இதன் மூலம் கம்ப்யூட்டர் மற்றும் மொபல் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோர்கள் பாதுகாப்பாக தங்கள் பணியை தொடரலாம்
இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு மற்றும் எலக்ட்ரானிக் அமைச்சர் ரவிசங்கர் அவர்கள் கூறியபோது, 'உலக நாடுகள் ஒன்றிணைந்து மால்வேர் க்ளினிங் சிஸ்டம் என்ற அமைப்பு மூலம் தங்கள் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான இண்டர்நெட்டை வழங்கி வருகின்றனர். தற்போது இந்தியாவும் இதில் இணைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள 13 வங்கிகள் மற்றும் இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளதால் எலக்ட்ரானின் பயன்பாடுகளை பாதுகாப்புடன் பயன்படுத்துவதில் நாம் மேம்பட்டுள்ளோம். இவ்வருட இறுதிக்குள் முழுமையாக இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் இண்டர்நெட் பாதுகாப்பை பெற்றுவிடும் என்று நான் நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.
மத்திய அரசின் சைபர் ஸ்வாச்டா கேந்த்ரா என்ற அமைப்பு இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும், தொழிற்சாலைகளுடன் இணைந்து பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை முதல்கட்ட ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.
தங்களுடைய கம்ப்யூட்டர்களில் இருந்து மால்வேர் எப்படி தாக்கும்? அதை எப்படி தவிர்ப்பது என்பதை பொதுமக்கள் முதலில் தெரிந்து கொள்ள இந்த அமைப்பு முதலில் செயல்படும்.
இதற்காக நேஷனல் சைபர் கோ-ஆர்டினேஷன் செண்டர் வரும் ஜூன் முதல் செயல்பட தொடங்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் இதை செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வெளியானது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ்-அம்சங்கள் மற்றும் விலை.!
மேலும் பத்துக்கும் மேற்பட்ட STQC என்று சொல்லக்கூடிய டெஸ்ட் செய்யும் செண்டர்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான கட்டணமும் ஐம்பது சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், சைபர் க்ரைம் தொழில்நுட்பத்தையும், தடயவியல் லேப்-ஐயும் பயன்படுத்தி நம்முடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் பிரசாத் தெளிவுபடுத்தியுள்ளார்
மேலும் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் கம்ப்யூட்டரில் வெளிப்பொருட்களை பயன்படுத்தும்போது குறிப்பாக பென் டிரைவ், எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவ், மற்றும் மற்ற யூஎஸ்பி பொருட்களை பயன்படுத்துவதை கூடியவரை குறைத்து கொள்ள வேண்டும் அல்லது பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்த வேண்டும்
அதேபோல் ஆண்ட்ராய்டு போன்களின் பாதுகாப்பிற்காக இயங்கி வரும் M-Kavach என்ற டூலை அனைவரும் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும்
அதேபோல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு AppSamvid என்பதை பயன்படுத்தினால் மால்வேருடன் உள்ள எதையும் இது டவுன்லோடு செய்ய அனுமதிக்காது என்பதால் நம்முடைய கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும்
கடந்த 2016ஆம் ஆண்டு மட்டும் 50,300 சம்பவங்கள் சைபர் செக்யூரிட்டி குறித்தே நிகழ்ந்துள்ளதால் இண்டர்நெட்டை பாதுகாப்புடன் பயன்படுத்துவதை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம்
வெளியானது மோட்டோ ஜி5 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ்-அம்சங்கள் மற்றும் விலை.!
கடந்த 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் 44,679, 49,455 and 50,362 ஆகிய சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் CERT அமைப்பு ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் பிபி செளத்ரி கடந்த மாதம் மக்களவையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த 'சைபர் ஸ்வாச்டா கேந்த்ரா' என்ற அமைப்பு மத்திய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் டெக்னாலஜி அமைப்பின் ஒரு பகுதி என்பது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் காரணமாக இண்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இந்த 'சைபர் ஸ்வாச்டா கேந்த்ராவுடன் இணைந்து செயல்பட வேண்டிய சரியான நேரம் இதுவே என MeitY செயலாளர் அர்ஜூனா சுந்தர்ராஜன் கூறியுள்ளதையும் நாம் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும்
இந்த நேரத்தில் இந்தியாவுக்கு தேவையான மிக முக்கிய தேவைகளில் ஒன்று என டெல்லியை சேர்ந்த ஐடி செக்யூரிட்டி சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் சி.இ.ஓ சகேத்மோடி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 50 மில்லியன் இண்டர்நெட் பயனாளிகள் மற்றும் 250 மில்லியன் மொபைல் இண்டர்நெட் பயனாளிகள் இருக்கும் மிகப்பெரிய இந்தியாவில் மத்திய அரசின் இந்த முயற்சி தகுந்த நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கருதுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470