இணையபாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் இந்திய வம்சாவெளியை சேர்ந்த 8 வயது சிறுவன்
இந்திய வம்சாவெளியை சேர்ந்த 8 வயது சிறுவன் இணைய பாதுகாப்பு குறித்த மாநாட்டில் உரையாற்றுகிறார், இம்மாநாட்டில் வெளியுறவுதுறை அமைச்சர் விகே சிங் உரையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் மாநாட்டில் அமெரிக்காவின் ரூபென் பால் இளம் தலைமுறையினரிடம் இணைய பாதுகாப்பு குறித்த அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இது குறித்து ரூபென் தெரிவிக்கும்போது கணினி மொழிகளை ஒன்றரை ஆண்டுகளாக பயின்று வருவதாகவும் தற்போது தனது ப்ராஜெக்டகளை தானாகவே செய்து கொள்வதாகவும் கூறினார்.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இவருக்கு பயிற்சி அளித்தது அவரது தந்தை மனோ பால் என்றும் தற்சமயம் ரூபென் ஆப்பிள் ஐஓஎஸ் இன் ஸ்விப்ட் ப்ரோகிராமிங் பயின்று வருகிறார், மனோ பால் பிறந்த வளர்ந்தது ஒடிஸா மாநிலம் என்றும் 2000 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
ஆகஸ்டு மாதம் ப்ரூடென்ட் கேம்ஸ் நிருவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ரூபென் பொருப்பேற்றார், அந்நிறுவனத்தின் பங்குதாரராக மனோ பால் உள்ளார். ரூபென் உரையாற்றும் 4 வது மாநாடாக இது அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications