இவர்கள் இணையதளம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்...
முன்பெல்லாம் பெரிய அளவில் முதலீடு செய்து இயந்திரங்கள் வாங்கி, குறைந்த அளவிலான லாப 'லகரங்கலையே' பெற்றார்கள். ஆனால் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் சம்பாதிக்கும் முறையையும் எளிதாக்கியுள்ளது என்று சொன்னால் அதுவும் மிகையாகாது. சாதாரணமாக ஒரு இணையதளம் மட்டுமே நடத்தி ஒரு மாதத்திற்கு லட்சங்களில் சம்பாதிக்கவும் முடியும். ஏன் கோடிகள் கூட சாத்தியமே!
ஆனால் இணையதளம் நடத்துவது என்பதும் அவ்வளவு சுலபமானதல்ல, முதலில் சிறிய முதலீடு, பின்னர் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. இது மட்டுமே இருந்தால் நீங்களும் விரைவில் கோடீஸ்வர் ஆகிவிடலாம். கடின உழைப்பு இல்லாமல் காப்பியடித்தால் கூகுளிடமிருந்து பெரிய ஆப்பு ரெடியாகவும் இருக்கும். பின்பு போட்ட குறைந்த அளவு பணம் கூட திரும்ப கிடைக்காது என்பது கூடுதல் தகவல். பின்வரும் இவர்களும் இணையதளம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்...
சமூக வலைத்தளங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்ய தகவல்கள்...

இவர்கள் இணையதளம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்...
கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான, தற்பொழுது கூகுள் நிறுவனத்தின் CEO வாக இருக்கும் லார்ரி பேஜ் தான் அடுத்த முக்கியமான இடத்தில் இருக்கிறார். இவருடைய 2012ஆம் ஆண்டின் வருமானம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,870 கோடிகள்!!

இவர்கள் இணையதளம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்...
கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரானசெர்ஜி பிரின் தான் அடுத்த முக்கியமான இடத்தில் இருக்கிறார். இவருடைய 2012ஆம் ஆண்டின் வருமானம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,870 கோடிகள்!!
கூகுளின் லார்ரி பேஜ், மற்றும் இவர் என இருவரும் ஒரே அளவே சம்பாதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இணையதளம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்...
நமக்கெல்லாம் மிகவும் பிடித்த ஃபேஸ்புக் தளத்தின் நிறுவுனரான மார்க் ஜுகர்பெர்க் நன்றாக சம்பாதித்துவிட்டார். கடந்த 2012ல் மட்டும் இவர் சம்பாதித்த பணத்தின் அளவு எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,700 கோடிகள்!!

இவர்கள் இணையதளம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்...
இந்த ஜெஃப்ரே பிசோஸ் தான் அமேஸான் இணையதளத்தின் உரிமையாளர். இவரும் கோடிகளை அள்ளிய, அள்ளுபவர். இந்தியாவில் ஜங்லீயாய் வந்துள்ளது அமேஸான்.

இவர்கள் இணையதளம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்...
இபே தளத்தின் உரிமையாளர் இவரே. இந்தியாவிலும் பீர்ரீ ஒமிட்யர் புகழ் ஓங்கியே இருக்கிறது. இபே.இன் என்ற முகவரியில் இணைய விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறது இந்த தளம்.

இவர்கள் இணையதளம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆனார்கள்...
இந்த டேவிட் பிளோ தான் யாஹூ நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவர். தற்பொழுது யாஹூ சற்றே தளர்ந்திருந்தாலும் மீண்டுவரும் என்றே தோன்றுகிறது.
இம்மாதிரி இன்னும் ஆயிரம் உதாரணங்கள் இருக்கவே செய்கின்றன.


Click it and Unblock the Notifications