இனி ரயில்களில் இலவச 'வைஃபை' வசதி : ரயில்வே பட்ஜெட்டில் பன்சாலி உறுதி...
ரயில்வே பட்ஜெட்டை வெளியிட்டுவிட்டு, ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலி பேசுகையில் இணையம் வழியாக பயணச்சீட்டை முன்பதிவுசெய்யும் IRCTC தளத்தின் சேவை தரம் உயர்த்தப்படும் என்றார்.

மேலும் அவர்கூறுகையில், IRCTC தளத்தின் வாயிலாக டிக்கெட் புக்செய்வதில் பல சிக்கல்கள் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பல தகவல்கள் சேகரிக்கப்பட்டு தரம்உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அவர் தொடர்கையில், இ-டிக்கெட் மூலமாக IRCTC தளத்தில் ஒரு நிமிடத்திற்கு 7,200 டிக்கெட்கள் மட்டுமே பதிவுசெய்ய வசதியுள்ளது. ஆனால் தற்பொழுதுள்ள அமைப்பு வெறும் 2,000த்தை மட்டுமே ஒத்துழைக்கிறது. புதிய அமைப்பின்வாயிலாக ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் டிக்கெட்கள் வரை பதிவுசெய்ய முடியும். எனவே இனி எந்த சிரமங்களும் இருக்காது என்றார்.
மொபைல் வழியாக டிக்கெட் பதிவுசெய்வதும் தரமுயர்த்தப்படும். சில சிறப்பு ரயிகளுக்கு இலவச வைஃபை வசதியை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.


Click it and Unblock the Notifications