இந்திய மக்கள் 59 சதவிகிதம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.!
2021 ஆம் ஆண்டில் அனைத்து இணைய போக்குவரத்து பொருத்தமாட்டில் 76 சதவீதம் உயரும்.!
நாட்டில் இணைய பயனர்கள் 2016 ஆம் ஆண்டில் 373 மில்லியன் பயனர்களிடமிருந்து, 2021 ஆம் ஆண்டு 829 மில்லியன் பயனர்கள் அதிகம் ஆவர்கள் என சமீபத்திய அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது இந்திய மக்கள் 59 சதவிகிதம் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர், மேலும் வரும் ஆண்டுகளில் இதைவிட அதிக மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, மக்கள் தினசரி வாழ்க்கையில் இந்த இணையப்பயன்பாடு முக்கியமாகிவிட்டது, பேங்க் மற்றும் அலுவலகம், பள்ளி, கல்லூரி போன்ற அனைத்து இடங்களிலும் அதிகமாக பயன்படுவது இந்த இன்டர்நெட்.
தற்போது இந்தியா பொருத்தமாட்டில் 4 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது என சிஸ்கோ விஷுவல் நெட்வொர்க்கிங் இன்டெக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
உயர் அலைவரிசை மற்றும் நுண்ணறிவு நெட்வொர்க்குகள் மூலம் சாதனம் திறன்களை ஒருங்கிணைத்து அதிக அலைவரிசை தரவு, வீடியோ மற்றும் மேம்பட்ட மல்டிமீடியா போன்றவற்றை பயன்படுத்த முடியும். வைஃபை மூலம் தற்போது அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்தப்படுகிறது என்று சப்ஜெக்ட் டெவலப்பர் பிசினஸ் நிர்வாக இயக்குனர் சஞ்சய் கவுல் தெரிவித்தார். சிஸ்கோ
தற்போது அதிகமாக 4ஜி சேவை பயன்பட்டு வருகிறது, கூடிய விரைவில் அனைத்து இடங்களுக்கும் 5ஜி சேவையை வழங்க தொலைதொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. மொபைல் இணையத்தைப் பயன்படுத்தும் மக்கள் 22 சதவீதமாக உள்ளனர்.
2021 ஆம் ஆண்டில் அனைத்து இணைய போக்குவரத்து பொருத்தமாட்டில் 76 சதவீதம் உயரும் என பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








