இந்தியா: 10.4-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7.!
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து பொருட்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் கேலக்ஸி டேப் ஏ7 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும் கேலக்ஸி டேப் ஏ7 சாதனம் ஆனது 10.4-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2000 x 1200 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த டேப்லெட் சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இந்த சாதனம் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த சாதனம் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் களமிறங்கும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 சாதனத்தின் பின்புறம் 13எம்பி + 5எம்பி என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான சாதனம்.

கேலக்ஸி டேப் ஏ7 சாதனத்தில் 7000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான சாதனம்.

தங்கம், சில்வர், சாம்பல் உள்ளிட்ட நிறங்களில் இந்த கேலக்ஸி டேப் எஸ்7 சாதனம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ரூ.20,500-என்ற விலையில் இந்த அட்டகாசமான சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது


Click it and Unblock the Notifications