Home
Social media

செல்போன் பார்த்த படி நடந்துசென்று ஓட்டைக்குள் விழுந்த இளைஞர்.! கடைசியில் என்ன ஆச்சு?

தற்போதை காலகட்டத்தில் செல்போன் மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது, காரணம் நமது முக்கியமான ஒரு சில வேலைகளை முடிக்க இந்த செல்போன்கள் அதிகம் உவுகின்றன என்றே கூறலாம். ஆனால் செல்போன்களை தேவையான இடங்களில் மட்டுமே பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

அதேபோல் இப்போது செல்போனை மக்கள் அதிக

அதேபோல் இப்போது செல்போனை மக்கள் அதிக நேரம் பயன்படுத்து துவங்கி விட்டனர் என்றுதான் கூறவேண்டும். இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் செல்போன் இல்லாத நபர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம்.

அறியாமல் விழுந்த வீடியோ இணையத்தில்

அதாவது இப்போது சாப்பிடும்போது, வாக்கிங் போகும் போது, ஏன் பாத்ரூம் போகும்போது கூட ஒரு சிலர் செல்போனுடன் செல்கின்றனர். அதேபோல் சிலர் சாலையில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே வாகனத்தை இயக்குவதால் விபத்துக்களும் நேரிடுகின்றன. இந்நிலையில் செல்போனை பார்த்துக்கொண்டே சென்ற இளைஞர் ஒருவர் தரையில் துளை இருப்பதை அறியாமல் விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தகவலின்படி, துருக்கியின் இஸ்தான்புல்

வெளிவந்த தகவலின்படி, துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் செல்போன் பார்த்துக்கொண்டே நடந்து சென்ற இளைஞர் ஒருவர், அங்கு தரையில் திறந்துகிடந்த துளையின் வழியாக கீழே விழுந்துள்ளார். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

குறிப்பாக அந்த இளைஞர் தவறி கீழே விழுந்ததும், கீழ்தளத்தில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள அட்டை பெட்டிகளில் விழுந்ததால் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பாக அந்த இளைஞர்

மேலும் இதுதொடர்பாக அந்த இளைஞர் அப்துல்லா பேசுகையில், நான் செல்போனை பார்த்துக்கொண்டே வந்ததால் அதை கவனிக்கவில்லை. பின்பு கீழே விழுந்தபோது பெட்டிகளின் மேல் விழுந்ததால் காயம் ஏதும் ஏற்படவில்லை. நல்ல வேளையாக
அன்று பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் சாலை

அதேபோல் நாடுமுழுவதும் சாலை விபத்து மூலம் இறப்பவர்களின் சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று செய்திகளில் நாம் பார்த்திருப்போம். குறிப்பாக சாலை விபத்திற்கு முக்கிய காரணங்களாக இருப்பது மது மற்றும் செல்போன் என்றேகூறலாம்.

ன ஓட்டிகளால்

குறிப்பாக சாலை விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளால், இந்திய சாலைகள் தினந்தோறும் அதிக விபத்துக்களை சந்தித்து கொண்டுள்ளன. பின்பு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டு வாகனம் ஓட்டுவது ஆகியவையே பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாக உள்ளன.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
young man who walked as he saw the cell phone and fell into the hole: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X