பெண்ணிற்கு தெரியாமல் பாத்ரூமிற்குள் பதுங்கிய பாம்பு! என்ன நடந்தது தெரியுமா?

|

ஆஸ்திரேலியாவில் உள்ள தனது வீட்டில் ஒரு பெண், தனது பாத்ரூமுக்குள் புகுந்து டாய்லெட் சின்க் உள்ளே பதுங்கியிருந்த பாம்பின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

பெண்ணிற்கு தெரியாமல் பாத்ரூமிற்குள் பதுங்கிய பாம்பு! என்ன நடந்தது?

ஆஸ்திரேலியாவில் உள்ள கேர்ன்ஸ் என்ற பகுதியில் வசித்து வரும் நிக்கோல் எரே என்பவர் இல்லத்தில் தான் இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிக்கோல் எரே வழக்கம் போல் வேலை முடிந்து வீடு திரும்பிய போது, பாத்ரூமில் உள்ள டாய்லெட் சின்க்கில் கருப்பாக ஏதோ தெரிந்திருக்கிறது.

அந்த கருப்பான உருவகம் நெளிந்து வளைந்து தனது தலையை நீட்டி வெளியே பார்த்த பிறகு தான் அது ஒரு நீர் மலைப்பாம்பு என்பது நிகோலிற்கு தெரியவந்துள்ளது. அதை கண்டு அதிர்ந்த நிக்கோல் உடனே மீட்பு குழுவுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

பெண்ணிற்கு தெரியாமல் பாத்ரூமிற்குள் பதுங்கிய பாம்பு! என்ன நடந்தது?

தகவல் அறிந்து விரைந்து வந்த மீது குழுவினர், அந்த பாம்பை உடனே பிடித்து பத்திரமாக அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால் பிரச்சினை அத்தோடு முடிந்துவிடவில்லை. அடுத்த நாளே நிக்கோலின் வீட்டின் உள்ளே மற்றொரு பாம்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முகம் கழுவும் சின்க்கின் மேல், இந்த நீளமான நீர் மலைப்பாம்பு கருப்பாக ஊர்ந்து கொண்டிருந்திருக்கிறது. இதனைப் பார்த்தவுடன் உடனே இந்த தகவல் மீட்பு குழுவினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் வந்து பாம்பை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இரண்டு நாட்களில் இரண்டு பாம்புகளை ஒரே வீட்டில் பார்த்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
Woman Found Python Curled Up Inside The Toilet Bowl In Her Bathroom : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X