வாட்ஸ் ஆப்பில் மனைவி ஆண்நண்பருடன் தவறான சாட்டிங்:கணவன்-மகன் தற்கொலை!
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேரந்தவர் அர்ஜூன். இவர் சொந்தமாக டெயிலர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 9ம் வகுப்பு படிக்கும் வயதில் மகன் இருந்தார். அலமேலு வீட்டில் இருக்கும்
வாட்ஸ் ஆப்பில் மனைவி அடிக்கடி சாட்டிங் செய்து வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் மனையின் போனை எடுத்து பார்த்துள்ளார்,
அதில் மனைவி அலுவலகத்தில் சேலை செய்யும் ஆண் நண்பருடன் உறவை உறுதி செய்யும் வகையில் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் மனவேதனையடைந்த கணவன், மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் ஆப்பில் மனைவி சேட்டிங்:
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேரந்தவர் அர்ஜூன். இவர் சொந்தமாக டெயிலர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 9ம் வகுப்பு படிக்கும் வயதில் மகன் இருந்தார்.
அலமேலு வீட்டில் இருக்கும் நேரத்தில் வாட்ஸ் ஆப்பில் நண்பர்களுடன் சேட்டிங் செய்து வந்துள்ளார்.

கணவன்-மகன் தற்கொலை:
இந்நிலையில் அலுமேல புதன்கிழமை வேலைக்கு சென்று விட்டு வீடு, திரும்பிய நிலையில், அர்ஜூனன், 13 வயது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளனர், உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டில் இருந்து தேனில் கலந்த சாணிப்புவுடர் மற்றும் அர்ஜூன் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் போலீசார் கைப்பற்றினர். முதலில் தேனில் சாணிப்பவுடர் கலந்து குடித்து விட்டு, இருவரும் பிழைத்துக் கொள்வதாக நினைத்து, தூக்கில் தொங்கியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தவறான வாட்ஸ் ஆப் சேட்டிங்:
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்று வருகிறார் அலமேலு, வாட்ஸ் ஆப்பில் நிறைய நண்பர்கள் இருந்தாகவும் இதில் ஒரு ஆண் நண்பருடன் அலமேலு நீண்ட நேரம் சாட்டிங்ககில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை கண்ட அர்ஜூனன் கண்டித்துள்ளார். ஆனால் அலமேலு கணவனின் பேச்சை கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

மனைவியின் வாட்ஸ் ஆப் சேட்டிங் பார்த்தார்:
சம்பவத்தன்று இரவு மனைவி அலமேலு அந்த நபருடன் சாட்டிங்கில் ஈடுபட்டு வாட்ஸ் ஆப் பதிவுகளை வாசித்துது பார்த்த அர்ஜூனன் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். தடம் மாறி பயணித்த தனது மனைவியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது போல அந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள் இருந்தாக கூறப்படுகின்றது.
இதனால் விரகத்தி அடைந்து அர்ஜூனன் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாட்ஸ் ஆப் சேட்டிங்கை பார்க்கும் ஊழியர்கள்:
அதே நேரத்தில் வாட்ஸ் ஆப் என்பது தகவல் பறிமாற்றத்துக்கான செயலி என்றும் அதில் ரகசியமானது என்று ஒன்றும் இல்லை என்று கூறும் சைபர் கிரைம் காவல்துறையினர் நாம் பதிவு
செய்யும் ஒவ்வொரு புகைப்படமும், பதிவுகளும் வாட்ஸ் ஆப் நிறுவன ஊழியர்களால் எளிதாக பார்க்க இயலும், அதனால் பிறர் பார்வைக்கு அவை எளிதாக செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்.

அளவோடு பயன்படுத்த வேண்டும்:
வாட்ஸ் ஆப் சேவையை அளவோடு பயன்படுத்தினால் பிரச்னையும் இல்லை, எப்போதும் கையில் செல்போனுடன் வாட்ஸ் ஆப் சாட்டிங்கில் மூழ்கி புது புது நண்பர்களுடன் உரையாடினால் அது குடும்பத்தில் என்ன விதமான விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சோக சம்பவமும் ஒரு சான்று.!


Click it and Unblock the Notifications