பணத்தை விசிறியெறிந்த காங். எம்.எல்.ஏ : வைரல் வீடியோ!
ரத்தன்பூர் சட்டமன்ற உறுப்பினரான அல்பேஸ் தாக்கூர், அவரின் சமூக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் ரூபாய் நோட்டுகளை விசிறியெறிந்தது படம்பிடிக்கப்பட்டுள்ளது.
பாதனில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியொன்றில் குஜராத் காங்கிரஸ் தலைவர் அல்பேஸ் தாக்கூர் பணத்தை விசிறியெறிந்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ காங்கிரஸ் தலைவர் பண மழை பொழிய வைக்கும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளது.

ரத்தன்பூர் சட்டமன்ற உறுப்பினரான அல்பேஸ் தாக்கூர், அவரின் சமூக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றில் ரூபாய் நோட்டுகளை விசிறியெறிந்தது படம்பிடிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிக்கைகளின் படி, இது போன்ற நிகழ்ச்சிகளில் வீசிப்படும் பணம் சேகரிக்கப்பட்டு, அறக்கட்டளை வாயிலாக பல நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
கீதா
இந்த நிகழ்ச்சியில் பிரபல குஜராத்தி பாடகரான கீதா ராபாரியின் கச்சேரியும் நடைபெற்றது. அவர் பாடிக்கொண்டிருக்கும் போது பணத்தை வீசியெறிந்த தாக்கூரை பார்வையாளர்கள் படம்பிடித்துள்ளனர்.

பெண்கள்
இச்சம்பவம் பற்றி தாக்கூரின் ஆதரவாளர்கள் கூறும் போது, இது தொண்டு நிறுவனங்களுக்காகவே செய்யப்பட்டதாக கூறுகின்றனர். இந்த பணத்தை கொண்டு அந்தப் பகுதியில் பெண்கள் விடுதி கட்டப்படவுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

பஞ்சாப் கேசரி
அல்பேஸ் தாக்கூரின் இந்த செய்கை பற்றி பஞ்சாப் கேசரி கூறுகையில், இந்த நிகழ்சியின் மூலம் எழும் சர்ச்சைகளைப் பற்றி அவர் நன்கு அறிவார். ஆனால் இது நல்ல காரியத்திற்காக செய்யப்படுவதால் அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.

10 ரூபாய் நோட்டுகள்
மேலும் அதற்கு பயன்படுத்தப்பட்டது 10 ரூபாய் நோட்டுகள் தான் என்றும், அவருடன் 15க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications