வைரல் வீடியோ: ரயில் தண்டவாளத்தில் சிக்கிய மூதாட்டி! என்ன நடந்தது தெரியுமா?
கர்நாடகா மாநிலத்தில், மூதாட்டி ஒருவர் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாகத் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டார். முழு சரக்கு ரயிலும் அவர் மீதி கடந்து சென்றும், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார். இந்த விடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அசம்பாவிதம்
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலபுராகி மாவட்டம், சித்தாபுரா என்ற பகுதியில் வசிக்கும் முனிபாய்(65) என்ற மூதாட்டி தான் தண்டவாளத்திற்கிடையில் சிக்கியவர். ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மரண பீதியில் மூதாட்டி
தண்டவாளத்தைக் கடக்க முயற்சித்த போது, மூதாட்டி தண்டவாளத்திற்கிடையில் சிக்கி இருக்கிறார். ரயில் வருவதைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல், சுற்றி இருப்பவர்கள் கூச்சலிட்டதும் அந்த மூதாட்டி தண்டவாளத்திற்கு இடையில் மரண பீதியில் உயிரை வெறுத்து படுத்திருக்கிறார்.

நிற்காமல் சென்ற சரக்கு ரயில்
அவர் அருகே வந்த சரக்கு ரயில் நிற்காமல், அவர் மீதி ஏறிச் சென்றுள்ளது. சுமார் 1:26 நிமிடங்கள் முழு சரக்கு ரயிலும் அவர் மீதி ஏறிக் கடந்து சென்றுள்ளது. தண்டவாளத்திற்கு இடையில் குப்புறப் படுத்துக்கொண்டு மூதாட்டிக்கு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார். இதை சுற்றி இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
ரயிலுக்கு அடியில் 1:20 நிமிடங்கள்
இதேபோல் 2016 ஆம் ஆண்டும் ஒரு மூதாட்டி சரக்கு ரயிலுக்கு அடிக்கீழ் சுமார் 1.20 நிமிடங்கள் சிக்கிக்கொண்டார். ஒரு முழு சரக்கு ரயிலும் அவரை மீது கடந்து சென்றும் அவர் உடம்பில் சிறிய கீறல் கூட ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த மூதாட்டியின் வீடியோ பதிவு சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.


Click it and Unblock the Notifications