தெருவில் பசியால் தவித்த சிறுவனுக்கு தனது உணவை ஊட்டிய சிஆர்பிஎப் வீரர்: வைரல் வீடியோ.!
இதில் இருந்து தப்பிய இக்பால் சிங் என்ற வீரர் வேறு பதிக்கு பாதுகாப்பு பணிக்காக மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அப்போது தெருவோரம் ஒரு சிறுவன் பசியோடு இருப்பதை கண்ட அவர். இதையடுத்து தான் வைத்திருந்த உணவ
பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது நடத்திய தற்கொலை தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியானார்கள்.
இதில் இருந்து தப்பிய இக்பால் சிங் என்ற வீரர் வேறு பதிக்கு பாதுகாப்பு பணிக்காக மாற்றம் செய்யப்பட்டிருந்தார். அப்போது தெருவோரம் ஒரு சிறுவன் பசியோடு இருப்பதை கண்ட அவர்.

இதையடுத்து தான் வைத்திருந்த உணவை அந்த சிறுவனக்கு ஊட்டி விட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி விட்டது.
மேலும் அந்த வீரருக்கு பாராட்டுகளும் குவிகின்றது.

40 சிஆர்பிஎப் வீரர்கள் பலி:
கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமாவில், பாதுகாப்பு பணிக்காக வாகனங்களில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி தற்கொலை வெடி குண்டு தாக்குதல் நடத்தினால். இதில் 40 வீரர்கள் பலியாகினர்.
இதில், இக்பால் சிங் என்ற வீரர் உயிர் தப்பினார். மேலும் அங்குள்ள வீரர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

வேறு இடத்தில் பணி:
இந்த சம்பவம் நடந்து பிறகு 2 மாதத்திற்கு பிறகு ஸ்ரீநகர் நவாக்கடாலில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணியில் அவர் நியமிகப்பட்டிருந்தார்.
அப்பேது, அங்கு ஒரு சிறுவன் பசியோடு இருப்பதை இக்பால் சிங் உணர்ந்தார். இதையடுத்து தான் சாப்பிட வைத்திருந்த உணவை கொடுத்த முடிவு கொடுக்க முடிவு செய்தார்.
உணவு ஊட்டி விட்டார்:
பிறகு பசியோடு இருந்த சிறுவனுக்கு வீரர் இக்பால் சிங் தனது கையால் உணவை ஊட்டி விட்டார். அப்போது வாயில் ஒட்டியிருந்த எஞ்சிய உணவையும் அவர் கையால் சுத்தம் செய்தார்.
பிறகு தண்ணீரையும் குடிக்க வைத்தார்.
வைரல் ஆனது:
இதுகுறித்த வீடியோவும் டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட உடவுன் 7000 அதிகமான நபர்கள் பார்த்துள்ளனர். 1000 முறை ரீடுவிட் செய்யப்பட்டுள்ளது.
சிஆர்பிஎப் டுவிட்டர்:
இதுகுறித்து சிஆர்பிஎப் தனது டுவிட்டரில் இக்பால் சிங் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
மதிப்பு மற்றும் இரக்கம் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் என்று சிஆர்பிஎப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications