காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.!
இந்தியாவை பலி வாங்க பாகிஸ்தான் அந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து ஏவிட்டது. இந்தியாவின் மீது இன்று வரை பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றது. புல்வாமா தாக்குதலுக்கு பலிவாங்க காளிய
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியாவின் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தான் இந்தியாவின் மீது வன்மத்தை காட்டி வந்தது. கார்கில் உள்ளிட்ட போர்களிலும் பாகிஸ்தான் தோற்றது.

இந்தியாவை பலி வாங்க பாகிஸ்தான் அந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்து ஏவிட்டது. இந்தியாவின் மீது இன்று வரை பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றது.
புல்வாமா தாக்குதலுக்கு பலிவாங்க காளியாக மாறி கோர பசியோடு இந்தியா இருக்கின்றது. இதற்கு அமெரிக்காவும் முழு ஆதரவு வழங்கியுள்ளது.

புல்வாமா தாக்குதல்:
காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வாகனங்களில் 2500 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெடிகுண்டு நிரப்பிய காரில் பயங்ரகவாதி வீரர்களின் வாகனங்களின் மீது மோத விட்டு வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில், 44 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 20க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

ஜெய்ஷ்இ முகமது அமைப்பு:
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்இ முகமது அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. பாகிஸ்தான் பயங்கர வாதத்திற்கு துணை நின்று வருகின்றது. இந்த முறை நடந்த தாக்குதலால் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கான இந்திய தூரதரை இந்தியா திரும்ப பெற்றுள்ளது.

சர்ஜிக்கல் தாக்குதலுக்கு சிறப்பு படை:
சர்ஜிக்கல் தாக்குதலுக்காக இந்தியா ச சிறப்பு படையை உருவாக்கி வருகின்றது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், இந்த படை அதி நவீன தொழில்நுட்பத்தில், அமெரிக்காவின் சீல் டீமை போல எந்த ஒரு சூழ்நிலையிலும் பயங்கர வாதிகளுடன் சண்டையிட்டு வெல்லும் அமைப்பை பெற்றுள்ளது.

. இந்தியாவுக்கு முழு ஆதரவு:
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் ஜான் போல்டன். இந்த ஆலோசனையின் போது, தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்தியாவுக்கு முழு அதிகாரம்:
தனது சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதற்கு இந்தியாவிற்கு முழு அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக நான் அஜித் தோவலிடம் தொலைபேசியில் இருமுறை பேசியுள்ளேன். அமெரிக்காவின் இரங்கலையும் அப்போது அவரிடம் நான் தெரிவித்துக் கொண்டேன், என்று ஜான் போல்டன் கூறியுள்ளார்.

அமெரிக்கா உறுதி:
ஜான் போல்டன் மேலும் கூறுகையில், பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவு இயக்கங்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும், என்பதில் அமெரிக்கா மிகவும் தெளிவாக இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானிடம் ஆலோசனை நடத்தவும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானை தனிமைபடுத்தும் முயற்சி:
இந்தியாவின் வெற்றி பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படக்கூடிய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு, புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாடுகளில் இருந்து பாகிஸ்தானை தனிமைபடுத்தும், முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகளிடம், புல்வாமா தாக்குதலின் பின்னணி பற்றி இந்தியா விளக்கியுள்ளது. இதில் அமெரிக்காவின் ஆதரவு என்பது முக்கியமான மைல்கல் ஆகும்.

கோரா தாண்டவம் ஆடும் இந்தியா:
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் பாகிஸ்தான் பயங்கர வாதிகளை எதிர்க்க தனது முழு அதிகாரத்தையும் வழங்கியுள்ளது. இந்தியா இனி எல்லையை தாண்டி சென்று பாகிஸ்தான் தீவரவாதிகளை கூண்டோ அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.
இந்திய பிரதமர் மோடி தீவிரவாதத்தை ஒழிக்க முழு சுதந்திரத்தையும் வழங்கியுள்ளார். இதனால் விரைவில் காளி போல ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ரத்தத்தை பார்ப்பார்கள் என்பதில் சந்தேமில்லை.


Click it and Unblock the Notifications








