முதலில் ட்விட்டரில் வெளியாகும் 'சற்றுமுன்' செய்திகள்!

By Super
|

நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டின் கட்டண உயர்வை கடுமையாக எதிர்த்துள்ளது மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி. இந்த பரபரப்பான செய்தி முதலில் டிவிட்டரில்தான் வெளியானது.

நண்பர்கள் பகிர்ந்து கொள்ளும் சாதாரண தகவல்கள் மட்டும் வெளியாகி கொண்டிருந்த டிவிட்டரில் இப்போது அரசாங்க சம்மந்தமான முக்கிய தகவல்களும் முதலில் வெளியாகி வருகிறது. ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இதன் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. தனது கட்சி அமைச்சர் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டுக்கு மம்தா பானர்ஜியே கடும் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலில் ட்விட்டரில் வெளியாகும் 'சற்றுமுன்' செய்திகள்!

இந்த செய்தி முதலில் ட்விட்டரில்தான் வந்தது. சமூக வலைதளங்கள் வழியாக செய்திகள் தற்போது காட்டுத் தீபோல் பரவுவதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக கூறலாம். தவிர ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பதிவி விலகுவார் என்பது போன்ற கருத்துக்களும் இதில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த செய்திக்கு ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியும் மறுப்பு தெரித்ததும் ட்விட்டரில்தான்.

முன்பெல்லாம் இது போன்ற தகவல்கள் முதலில் நாளிதழ்களில் வெளியாகி வந்தது. அதன் பிறகு இது போன்ற செய்திகள் டிவி மீடியாக்களில் வெளியானது. இப்பொழுது இன்னும் கூடுதல் முன்னேற்றமாக இது போன்ற செய்திகள் டிவிட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் முதலில் வெளியாகின்றது.

சில முக்கிய செய்திகள் சோஷியல் மீடியாக்களில் வெளியான பின்புதான் டிவி சேனல்களிலேயே தரப்படுகிறது. இது போன்ற விஷயங்கள் சோஷியல் மீடியாவின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதாகவும் இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X