டிக் டாக் வீடியோ மோகம்: குட்டையில் மூழ்கி இளைஞர் பலி.! நடந்தது இதுதான்.!
டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

விக்னேஸ்வரன்((23)
இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் விக்னேஸ்வரன்(23) அந்த பகுதியில் தறித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். வின்னேஸ்வரன் டிக் டாக்
செயலியை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்.

விடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்
விக்னேஸ்வரன் தினமும் டிக் டாக்கில் தான் நடித்து விடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில்தனது நண்பர்களுடன் அந்தபகுதியில் இக்கும் குட்டைக்கு குளிக்க சென்றிருக்கிறார் அப்போது நீரில் டிக்-டாக் எடுத்துள்ளனர்.அந்த நேரத்தில் வின்னேஸ்வரன் திடிரென அழத்துக்கு சென்றுள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள்காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக விக்னேஸ்வரன் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.

தீயணைப்பு வீரர்கள்
மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி விக்னேஸ்வரனை பிணமாக மீட்டனர். உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் தெரியவந்தது என்னவென்றார், விக்கேஸ்வரன் இறுதியாக தனது செல்போனில் டிக் டாக் செயலியை பயன்படுத்தியது தெரியவந்தது. அதுவும் குட்டையில் நீந்தியபடி மாடு ஒன்றின் மீது ஏறி வீடியோ எடுத்துள்ளார். அப்போது தான் தண்ணீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது. மேலும் அவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications