லைவ் ஐ.பில்.எல் ஸ்கோர் அப்டேட் சொல்லும் டாக்ஸி.! டிரைவர் அசத்தல்.!
டாக்சி டிரைவர் ஒருவர் தனது டாக்ஸியின் கூரை மீது லைவ் ஸ்கோர் போர்டு திரையை நிறுவியுள்ளார்.
மக்கள் கவனம் முழுதும் மக்களவை தேர்தல் மற்றும் ஐ.பில்.எல் மீது முழுவதுமாக இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபினட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதி வருகிறது.

உங்கள் பிடித்த அணி விளையாடி போது கூட, அனைவராலும் அணைத்து நேரங்களிலும் விளையாட்டை நேரலை காண இயலாத ஒன்றாகிவிட்டது. என்னதான் கையில் மொபைல் போன் இருந்தாலும், சிலருக்கு நேரம் தோதாக அமைவதில்லை.
இதையடுத்து, ஹைதராபாத்தில் உள்ள டாக்சி டிரைவர் ஒருவர் தனது டாக்ஸியின் கூரை மீது லைவ் ஸ்கோர் போர்டு திரையை நிறுவியுள்ளார். இந்த திரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் இடையே நேற்று நடந்த போட்டியின் ஐ.பி.எல். ஸ்கோர்கள் திரையிடப்பட்டுள்ளது.
ரெடிட் பயனர் ஒருவர் இந்த டாக்ஸியை சாலையில் பார்த்துவிட்டு, புகைப்படம் எடுத்து தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்களுக்காக இவர் செய்துள்ள காரியத்தை நெட்டிசன்ஸ்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications