ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் வேளாண் உற்பத்தி மேலாளர்.! எங்க தெரியுமா?
இந்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து முதல் முறையாக ஒரு மாணவர் விவசாய துறையில், ஒரு முக்கிய பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விவசாய துறையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று அனைவரும் பாராட்டி வருகின்றன
இந்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து முதல் முறையாக ஒரு மாணவர் விவசாய துறையில், ஒரு முக்கிய பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விவசாய துறையில் இது ஒரு முக்கிய மைல்கல் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

எம்.எஸ்.சி. வேளாண்மை
எம்.எஸ்.சி. வேளாண்மை (Agronomy) இறுதி ஆண்டு படித்து வரும் மாணவியான கவிதாவிற்குக் கண்டவை சேர்ந்த வேளாண் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக வேளாண் படித்து முடித்த பெண்ணிற்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது.

உற்பத்தி மேலாளர் பதவி
கனடாவைச் சேர்ந்த மிகப் பெரிய விவசாய நிறுவனம் ஒன்று, இந்தியாவைச் சேர்ந்த கவிதாவிற்கு உற்பத்தி மேலாளர் பதவியைத் தனது வேளாண் நிறுவனத்தில் வழங்கியுள்ளது. இந்த செய்தியை கேட்ட இந்தியர்கள் அனைவரும் கவிதாவிற்கு பாராட்டுகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ரூ.1 கோடி சம்பளம்
மானிடொபா அலுவலகத்தில், கவிதா இந்த மாத இறுதியில் வேளாண் இரசாயன உற்பத்தியை மேற்பார்வையிடும் உற்பத்தி மேலாளராக பணியாற்றப்போகிறார். உற்பத்தி மேலாளராக பணியாற்றப் போகும் கவிதாவிற்கு வருடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

நடத்தப்பட்ட நேர்காணல்களில் பலே
கவிதாவிடம் நடத்தப்பட்ட முன்மொழிவு அடிப்படையிலும், நிறுவனத்தின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையிலும் இந்த உற்பத்தி மேலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் துறையிலும் சாதனை
வேளாண் துறையிலும், கல்வியை நன்றாக கற்றுக் கொண்ட மாணவர்களுக்கும், திறமையுடன் அயராது உழைக்க நினைக்கும் மாணவர்களுக்கும் நிச்சயம் இதுபோன்ற அருமையான வாய்ப்புகள் கிடைக்குமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்று வேளாண்துறை பல்கலைக்கழக மேலாளர் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications