இவர் தான் உண்மையான ஹீரோ.! உயிரை பணயம் வைத்து குழுந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்.! வீடியோ.!
பெற்றோர்கள் பொது இடங்களில் குழுந்தைகளை கவனமாக அழைத்து செல்ல வேண்டும். குறிப்பாக இப்போது அனைத்து இடங்களிலும் வாகனங்கள் போக்குவரத்து சற்று அதிகமாக இருப்பதால் குழுந்தைகளை கவனமாக அழைத்து செல்ல வேண்டும்.

இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்த குழுந்தையை, தனது உயிரைப் பணயம் வைத்து ரயில்வே ஊழியர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மண்டலத்துக்கு உட்பட்ட வாங்கனி ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் இதை ரயில்வேயின் சுட்டுரைப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது வாங்கனி ரயில் நிலையத்தில் தனது தாயுடன் சிறுவன் ஒருவன் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருக்கிறான். அந்த சமயம் நடைமேடையின் ஓரத்தில் நடந்து சென்ற சிறுவன், திடீரென கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட, அப்போது மிக வேகத்தில் அதே தண்டவாளத்தில் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது.

மேலும் சிறுவன் தண்டவாளத்தில் விழுந்ததை கவனித்த ரயில்வே ஊழியர் ஒருவர், ஒரு நொடி கூட தாமதிக்காமல், தன்னுயிரை பணயம் வைத்து ஓடிச் சென்று சிறுவனை நடைமேடையில் இருந்த தாயிடம் தூக்கிவிட்டு, உடனே தானும் நடைமேடை மீது ஏறி, தன்னையும் தற்காத்துக் கொண்டு பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தார்.

குறிப்பாக ரயில் அந்த இடத்தை கடந்து செல்ல ஒரு சில நொடிகளே இருந்த நிலையில் சிறுவனையும் காப்பாற்றி, தன்னையும் தற்காத்துக் கொண்டார் அந்த ரயில்வே ஊழியர்.
சரியான நேரத்தில் மிகவும் சாமர்த்தியமாகவும் துரிதமாகவும் ஒரு ரியல் ஹீரோ போல செயல்பட்டு தனது உயிரை பற்றிக் கூட கவலைப்படாமல், சிறுவனின் உயிரைக் காப்பற்றிய அந்த ரயில்வே ஊழியர் மயூர் என்பவரை பல்வேறு மக்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் இவரின் வீடியோ தற்சமயம் இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது.

ரயில் நிலையத்தில் இருக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ரயில் வந்து நின்ற பின்பு ஏறுவது, இறங்குவது மிகவும் நல்லது. அதாவது சிலர் ரயில் நிற்பதற்கு முன்பே இறங்குவார்கள், இது மிகவும் ஆபத்தை உண்டாக்கும். அதேபோல் சிலர் ரயில் ஓரளவு வேகமாக செல்ல ஏறுவார்கள், இதனால் உயிர்போகும் ஆபத்துகள் கூட உள்ளது. எனவே இதை தவிர்ப்பது மிகவும் நல்லது.


Click it and Unblock the Notifications