Just In
- 55 min ago
ரூ.329 விலையில் 1000 ஜிபி டேட்டாவா? BSNL வழங்கும் இன்னும் ஏராளமான திட்டங்கள் லிஸ்டில் இருக்கு..
- 1 hr ago
'மர்ம' பள்ளம்: பாதாளத்துக்கான வாசல் என்று கூறும் கிராம மக்கள்.!
- 3 hrs ago
வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..
- 4 hrs ago
ஸ்பைஸ்ஜெட்: ரேன்சம்வேர் சைபர் தாக்குதல்- விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.!
Don't Miss
- News
"உதயநிதியால் எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க" அன்பில் மகேஷையும் பாராட்டிய சீமான் - திடீர்னு என்னாச்சு?
- Movies
திருமணத்தை திடீரென நிறுத்த காரணமே இதுதானா? நடிகையின் முடிவுக்கு பின்னால் இருந்தது அவர் தானா?
- Finance
5 மாதத்தில் 41% சரிவு.. ஏமாற்றம் தந்த ஐடி நிறுவனங்கள்.. இனி எப்படியிருக்கும்.. சரியான வாய்ப்பா?
- Lifestyle
ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் பலவீனமாக இருந்தால் எந்த மாதிரியான நோய்கள் வரும் தெரியுமா?
- Automobiles
தமிழகத்துல 6.5 சதவீதம் மக்கள்தான் கார்களை பயன்படுத்துறாங்களா! அப்போ டூ-வீலர்களை பயன்படுத்துறவங்க? முழு விபரம்!
- Sports
மும்பை அணியில் அர்ஜூனுக்கு வாய்ப்பு ஏன் இல்லை.. மௌனத்தை கலைத்த சச்சின்.. அணி தேர்வு குறித்து கருத்து
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள்! பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!
கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 6ம் கட்ட ஆராய்ச்சியில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்தேறியுள்ளது. தற்பொழுது இந்த ஆராய்ச்சியில் பெரிய தலையுடன் இரண்டு ஆதிகால எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது. இன்னும் பல மர்ம முடிச்சுகள் இந்த 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள்
மதுரை மாவட்டத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் தான் கீழடி கிராமம் அமைத்திருக்கிறது. இங்கு தான் தற்பொழுது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள கீழடி
உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த கீழடி அகழ்வாராய்ச்சியில் தற்பொழுது இரண்டு குழந்தைகளின் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு உடல்களும் அடுத்தகட்ட ஆய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உடல்களும் குழந்தைகளின் உடல்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

95 செமீ நீளம் கொண்ட மனித உடல் படிமங்கள்
கீழடியில் இதற்கு முன்பும் சில எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்தும் பெரியவர்களின் உடல் படிமங்கள். இந்த பகுதியில் இதுவரை மொத்தமாக மூன்று மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உடல்களில் ஒரு உடல் 95 செமீ நீளம் கொண்டது, மற்றொரு உடல் 75 செமீ நீளம் கொண்டது என்பது கூடுதல் தகவல்.
1 ஜிபி டேட்டா வெறும் 2 ரூபாய் மட்டுமே! அம்பானிக்கு தண்ணிகாட்டும் இளைஞர்களின் நிறுவனம்!

குழந்தை எலும்பு படிமத்திலும் சில சுவாரசியம்
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு உடல்களை வைத்து தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. தற்பொழுது இன்னும் கூடுதலாக இரண்டு குழந்தைகளின் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை எலும்பு படிமத்திலும் சில சுவாரசியமான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரிய தலை
கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் படிமங்களில், தலைகள் மட்டும் இயல்பை விட பெரிதாக இருக்கிறது. உடலின் மற்ற பகுதிகள் எப்பொழுதும் போல சாதாரணமாக இருக்கிறது. இந்த குழந்தைகளின் தலை பகுதி மட்டும் ஏன் பெரியதாக இருக்கிறது என்பதற்கான சரியான காரணம் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காரணம் இது தானா? சந்தேகத்தில் ஆராய்ச்சியாளர்கள்
இருப்பினும் அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களின் தகவலின்படி, பெரும்பாலும் நீண்ட காலம் புதைக்கப்பட்ட படிமங்களில் இப்படியான சில மாற்றங்கள் காணப்படும் என்று சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

எத்தனை ஆண்டு பழமையானது?
கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் வயது மற்றும் பாலினம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது எத்தனை ஆண்டு பழமையானது என்பது இன்னும் சில ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். இவற்றின் நிலையை வைத்துப் பார்க்கையில் இவை நிச்சயமாக கிமு 6ம் நூற்றாண்டிற்கு முந்தைய உடலாக தான் இருக்கக்கூடும் என்று சந்தேகித்துள்ளார்.

இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் படிமங்கள்
கீழடி ஆராய்ச்சியில் தற்பொழுது இந்த இரண்டு குழந்தைகளின் உடல்கள் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்குப் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய கீழடி சமூகம்
கார்பன் ஆராய்ச்சியில், கீழடி படிமங்கள் சுமார் 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சரியாகச் சொன்னால், இவை கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 600 வருடங்களுக்கும் முந்தையது என்பது ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999