Just In
- 5 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 6 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 6 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 6 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
கீழடியில் அவிழும் மர்ம முடிச்சுகள்! பெரிய தலையுடன் குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!
கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு அழுத்தங்களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 6ம் கட்ட ஆராய்ச்சியில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்தேறியுள்ளது. தற்பொழுது இந்த ஆராய்ச்சியில் பெரிய தலையுடன் இரண்டு ஆதிகால எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளது. இன்னும் பல மர்ம முடிச்சுகள் இந்த 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள்
மதுரை மாவட்டத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் தான் கீழடி கிராமம் அமைத்திருக்கிறது. இங்கு தான் தற்பொழுது 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் சுமார் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழர் நாகரீகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள கீழடி
உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த கீழடி அகழ்வாராய்ச்சியில் தற்பொழுது இரண்டு குழந்தைகளின் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு உடல்களும் அடுத்தகட்ட ஆய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உடல்களும் குழந்தைகளின் உடல்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

95 செமீ நீளம் கொண்ட மனித உடல் படிமங்கள்
கீழடியில் இதற்கு முன்பும் சில எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை அனைத்தும் பெரியவர்களின் உடல் படிமங்கள். இந்த பகுதியில் இதுவரை மொத்தமாக மூன்று மனித படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு உடல்களில் ஒரு உடல் 95 செமீ நீளம் கொண்டது, மற்றொரு உடல் 75 செமீ நீளம் கொண்டது என்பது கூடுதல் தகவல்.

குழந்தை எலும்பு படிமத்திலும் சில சுவாரசியம்
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரண்டு உடல்களை வைத்து தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. தற்பொழுது இன்னும் கூடுதலாக இரண்டு குழந்தைகளின் எலும்பு படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை எலும்பு படிமத்திலும் சில சுவாரசியமான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரிய தலை
கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் படிமங்களில், தலைகள் மட்டும் இயல்பை விட பெரிதாக இருக்கிறது. உடலின் மற்ற பகுதிகள் எப்பொழுதும் போல சாதாரணமாக இருக்கிறது. இந்த குழந்தைகளின் தலை பகுதி மட்டும் ஏன் பெரியதாக இருக்கிறது என்பதற்கான சரியான காரணம் எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காரணம் இது தானா? சந்தேகத்தில் ஆராய்ச்சியாளர்கள்
இருப்பினும் அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களின் தகவலின்படி, பெரும்பாலும் நீண்ட காலம் புதைக்கப்பட்ட படிமங்களில் இப்படியான சில மாற்றங்கள் காணப்படும் என்று சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எத்தனை ஆண்டு பழமையானது?
கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் வயது மற்றும் பாலினம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது எத்தனை ஆண்டு பழமையானது என்பது இன்னும் சில ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். இவற்றின் நிலையை வைத்துப் பார்க்கையில் இவை நிச்சயமாக கிமு 6ம் நூற்றாண்டிற்கு முந்தைய உடலாக தான் இருக்கக்கூடும் என்று சந்தேகித்துள்ளார்.

இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் படிமங்கள்
கீழடி ஆராய்ச்சியில் தற்பொழுது இந்த இரண்டு குழந்தைகளின் உடல்கள் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் இந்திய வரலாற்றையே மாற்றி எழுதும் அளவிற்குப் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய கீழடி சமூகம்
கார்பன் ஆராய்ச்சியில், கீழடி படிமங்கள் சுமார் 2600 வருடங்களுக்கு முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சரியாகச் சொன்னால், இவை கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 600 வருடங்களுக்கும் முந்தையது என்பது ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470