தமிழுக்கு முகம், சமஸ்க்கு முதுகுகாட்டிய திருமால் கர்நாடகாவுக்கு செல்ல அடம்.!
ஆழ்வார்களின் தமிழுக்கு மயங்கியும். ஆண்டாளின் திருப்பாவை நோன்பு என்பதாலும், 108 அடிய உயரத்தில் 380 டன் அடியில் இருக்கின்ற பிரமாண்ட பெருமாலை தூக்கி செல்ல தொழில் நுட்பமும் இன்று தவித்து வருகின்றது.
ஈரத் தமிழக்கு முகம் காட்டியும், முரட்டு சமஸ்கிருத்திற்கு முதுகாட்டிய திருமால் கர்நாடாக மாநிலத்திற்கு செல்ல அடம் பிடிக்கின்றார்.

இந்த பெருமால் கோதண்டராமர் என்ற பெரியரில் கர்நாடகாவுக்கு செல்ல இருக்கின்றார். தமிழகத்தில் இருந்து ஒரு பெரிய கரும்பாறையில் செலுக்கப்பட்டிருக்கின்றது.
ஆழ்வார்களின் தமிழுக்கு மயங்கியும். ஆண்டாளின் திருப்பாவை நோன்பு என்பதாலும், 108 அடிய உயரத்தில் 380 டன் அடியில் இருக்கின்ற பிரமாண்ட பெருமாலை தூக்கி செல்ல தொழில் நுட்பமும் இன்று தவித்து வருகின்றது. தமிழ் மீது உள்ள பற்றால் எம்பெருமான் கர்நாடகாவுக்கு செல்ல அடம்பிடிக்கின்றார்.

திருமால்:
திமாலை நம் முன்னோர்கள் மாயோன் என்று வணங்கி வந்தனர். இவர் காடும் காடும் சார்ந்த இடத்திற்கு கடவுளாக இருக்கின்றார். தமிழில் ஐந்து வகை நிலமும், ஐந்து வகை, கடவுளும், பொழுதும், திணையும் இருக்கின்றன.
இதில், வைணவர்களையும் தமிழால் ஆட்கொண்ட கவுளாகவும் திருமால் இருக்கின்றார். தமிழை பக்தி இலங்கியங்களால் வளர்த்த பெருமை வைசத்திற்கும், வைணத்திற்கும் மட்டும் உண்டு. திருமால் நாமத்தை பல்வேறு பெயர்களால் நாம் கூறி வருகின்றோம்.

ஆழ்வார்கள்:
ஆழ்வார்களில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என 12 பேர் இருக்கின்றனர்.
இவர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றும், திருப்பாவை என்றும் பாடியுள்ளனர். இதில் உள்ள பாடல்கள் வரிகளும், சொற்சுவையும் பொருட்சுவையும் தேனில் நனைத்து பிலா பழத்தை தின்றது போல் இருக்கும்.

மார்கழி:
தற்போது மார்கழியில், பகல் பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள் திருமாலை போற்றப்படும். தற்போது பகல் பத்து நிறைவு ஆகி வைகுண்டா ஏகாதேசியும் நிறைவு வடைந்துள்ளது.
பாவையர் நோன்பு மார்கழி முழுக்க உள்ளதால், திருமால் ஆண்டாளின் திருப்பாவை பாடலுக்கு மயங்கி அவரை மணக்க வேண்டி 108 திவ்ய பிரசேதங்களிலும் இருந்து பெருமால் சொக்கி நிற்கின்றார்.

108 அடியில் பிரமாண்ட பெருமாள் சிலை:
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஈஜிபுரத்தில் கோதண்டராமர் சிலை ஓரே கல்லில் 64 அடி உயரமும், 11 முகங்கள், 22 கைகள் கோண்டராமர் சிலையும், 7 தலை பாம்புள் ஆதிசேஷன் சிலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிலை பீடத்துடன் சேர்த்து 108 இருக்கும்.

வந்தவாசியில் பாறை வெட்டி எடுப்பு:
இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரக்கோட்டையில் கோதண்டராமர் சிலைக்காக 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி உயரமும் 380 எடை கொண்ட பாறையும், ஆதிசேஷன் சிலை 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயரமும் 230 டன் எடையுடைய பாறையும் எடுக்கப்பட்டன.
மேலும், சாமி சிலை செதுக்கும் பணியும் நடந்தன. தற்போது, முகம், கை உள்ளிட்ட உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

நவீன கிரேன், வாகனம்:
மும்பையை சேர்ந்த ரேஷம் சிங் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் இந்த வேளை கையில் எடுத்துள்ளது. 150 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரெயிலர் வாகனத்தை டிரெயிலர் பயன்படுத்தப்பட்டது. இது தோல்வியில் முடிந்தது. தற்போது 240 சக்கரங்கள் உள்ள ராட்சத டிரெயிலர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புல்லர் டிரக் வாகனம்:
இந்த 380 டன் எடை உடையை பிரமாண்ட சிலையை எடுத்துச் செல்ல புல்லர் டிரக் அதிநவீன வாகனம் பயன்படுத்தப்படுகின்றது. இதில் கிரேன்களும் பயன்படுத்தப்பட்டது. இந்த சிலைலை வழியில் எடுத்து வரும் போது, பல்வேறு இடங்களில் சக்கரங்கள் மண்ணில் புதையுண்டன.
செஞ்சிக் கோட்டைக்கு வந்தது:
3 தினங்களுக்கு முன் செஞ்சி வந்த இந்தச் சிலை, செஞ்சிக்கோட்டையின் நுழைவுவாயில் வழியே செல்ல தொல்லியல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதிக்காக சேத்துப்பட்டு சாலையில் வாகனம் காத்திருக்கிறது.

சிலையில் அகலம் குறைக்கும் பணி:
இதனிடையே, நுழைவுவாயில் வழியே செல்ல வசதியாக சிலையின் அகலத்தை 26 அடியிலிருந்து 25 அடியாக குறைக்கும் பணிகள் இன்று நடைபெற்று வருகின்றன. இதன் பிறகு தொல்லியல்துறையின் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிமிழுக்கு முகம் காட்டிய பெருமால்:
பெங்களூர் சமஸ்கிருதம் பேசப்படும் பூமியாகவும் இருக்கின்றது. இதனால், ஸ்ரீ ரங்கத்தில் வீற்றியிருக்கும் பெருமால் ஈரத் தமிழக் விளையாடும் தமிழகத்திற்கு தெற்கு நோக்கி முகத்தையும், முரட்டு சமஸ்கிருதம் நிறைந்த பகுதிக்கு முதுகையும் காட்டி படுத்துள்ளார் என்று வைணவனார்களில் முதன்மையானவரான பெரியவாச்சான் பிள்ளை என்பர் அழகாக விளக்கம் கொடுத்துள்ளார்.

அடம் பிடிக்கும் பெருமால்:
மற்ற தெய்வங்களை ஈஸியாகவும் கூட சென்று விடலாம். ஆனால், தமிழ் மீது பற்று வைத்துள்ள பெருமாலை அவ்வளவு சீக்கிரம் கொண்டு போக முடியாது. 108 அடியில் சிலை வைக்கபட இருந்தாலும், இந்த சிலை 108 திவ்விய பிரதேசங்களும் தற்போது நடக்கும் திருப்பாவை விழா பெருமால்களுக்கு முக்கியமானதாக இருக்கின்றது.
தமிழ் மனந்த பெருமாள் முரட்டு சமஸ்கிருதத்திற்கு அடிபடியாமல் செல்ல அடம் பிடிக்கின்றார். பெருமாலுக்கு பிள்ளை தமிழும் இருப்பதால், அவர் தமிழை விட்டு செல்ல அடம் பிடிக்கின்றார். தொழில் நுட்படும் இந்த மாதம் முடிந்த பிறகு தான் பெங்களூர் கொண்டு போக முடியும் என்று கூறப்படுகின்றது.

அனுமதி மறுப்பு
இந்நிலையில், ஆனால், கோட்டை வாயில் மற்றும் கோட்டை மதில் சுவரில் மோதி பாதிப்பு ஏற்படும் எனக் கூறி, தொல்லியல் துறையினர் அனுமதி மறுத்தனர்.


Click it and Unblock the Notifications