உலக சமூக வலைத்தள தினம்: சுவாரஸ்ய தகவல்கள்.!
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சேவைகளில் தினசரி 600 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்படுகின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்திய மற்றும் பல்வேறு நாடுகளில் சமூக வலைதளங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த சமூக வலைதளங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உதவியாய் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இன்று உலகம் முழுவதும் சமூக வலைத்தள தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக நாடுகள் முழுவதிலும் ஸ்மார்ட்போன் வரவிற்கு பின்பு சமூக வலைதளங்கள் நம் அனைவரின் உள்ளங்கையில் வந்துவிட்டது, குறிப்பாக இந்த சமூக வலைதளங்கள் காதல் செய்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்கள் பற்றிய பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

420 கோடி:
பேஸ்புக், டுவிட்டர் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களை உலக மக்கள் தொகையில் குறைந்தபட்டசம் 30சதவீதம் பயன்படுத்திகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபார வளர்ச்சி
மேலும் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 300கோடி ஆகும். பல்வேறு நிறுவனங்கள்
இந்த சமூக வலைதளங்களில் தான் அதிக முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 81சதவீதம் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக இந்த சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

பேஸ்புக்:
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சேவைகளில் தினசரி 600 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்படுகின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது,இது போன்ற சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களில் மட்டும் சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்படுகின்றன. மேலும் பேஸ்புக் வீடியோக்களை தினசரி 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

74 சதவீதம்
தற்சமயம் 2018-ஆம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவீதம் வீடியோவாக இருக்கிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது, மேலும்
ஸ்னாப்ஷாட் தளத்தில் இருக்கும் வீடியோக்களைக் கூட 800 கோடி முறை பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த சமூக வலைதளங்களில் பல்வேறு நன்மைகளும் உள்ளன, அதேபோல் தீமைகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications