தீயில் கருகி இளம்பெண் உயிரிழப்பு: மின் இணைப்பு பெட்டி வெடித்ததால் பரிதாபம்.!
சென்னை அருகே சூளைமேடு, புதிய மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்இ இவரது மனைவி லீமா ரோஸ் (வயது 35) நேற்று காலை மளிகை பொருட்கள் வாங் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

மின் இணைப்பு பெட்டி
அந்த சமயம் ஆண்டவர் தெரு சந்திப்பு அருகே சென்றபோது அங்கிருந்த மின் இணைப்பு பெட்டியில் இருந்த கேபிள் தீடிரென வெடித்து சிதறியது, பின்பு இதில் இருந்து வெளியேறிய தீப்பொறிகள் அந்த பகுதி முழுவதும் சிதறியது.
உடையில் தீ பிடித்தது
அப்போது அதில் சில தீப்பொறிகள் அங்கு நடந்து சென்ற லீமா ரோஸ் மீது விழுந்தது, இதனால் அவரது உடையில் தீ பிடித்தது. லீமோ ரோஸ் அணிந்திருந்தது நைலான் உடை என்பதால் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது..

தண்ணீர் மற்றும் மண்
தொடர்ந்து தீ வேகமாக பரவியதால் லீமோ ரோஸ் வலிதாங்க முடியாமல் கதறினார், இதைக்கண்ட அதிர்ச்சியடைந்த அக்கம்,பக்கத்தினர்,அவரது உடலில் எரிந்த தீயை தண்ணீர் மற்றும் மண் கொண்டு அனைத்தனர்.
அதன்பின்னர் உடல் கருகிய நிலையில் இருந்த லீமா ரோசை மீட்டு, 108ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்தவமணையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார்
ஆனால் லீமோ ரோஸ் உடலில் தீ அதிகமாக பரவியதால்,அவரது உடலில் 79சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்தமனையில் அனுமதித்து சிறுது நேரத்திலேயே, சிகிச்கை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications