என்ஜினியரிங் படிச்சிங்களா இதெல்லாம் நடந்துச்சா?
இன்று இந்தியாவின் மிக்பெரும் பிரச்சனை என்னவென்றால் வேலை இல்லாத் திண்டாட்டம் தான் பெரு நகரங்களில் கையில் பைலை தூக்கி கொண்டு அங்கும் இங்கும் அலையும் எத்தனையோ பேரா நீங்கள் பார்க்க முடியும் அவர்கள் அனைவருமே என்ஜினியரிங் படித்த மாணவர்கள் .
ஆம், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும், தேர்ச்சி பெறும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் இரண்டு மடங்காகியிருக்கிறது.
2006-07ம் ஆண்டு இந்தியா முழுவதும் 1,511 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 5.5 லட்சம் எஞ்சினியர்கள் பட்டம் பெற்று வெளி வந்தார்கள்.

$110 பில்லியன் (ரூ 6 லட்சம் கோடி) மதிப்பிலான ஐடி துறைக்கு லட்சோப லட்சம் எஞ்சினியர்கள் தேவை என்ற நோக்கத்தில் கல்லூரிகள் புற்றீசலாக பெருகியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு 3000-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்திருக்கிறார்கள்.
உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு ஐடி துறையிலும் உற்பத்தித் துறையிலும் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கப்படும் சில ஆயிரக்கணக்கான இடங்களுக்கு பல லட்சம் பட்டதாரிகள் போட்டி போடுகின்றனர்.
வளாக நேர்முகங்கள் (கேம்பஸ் இன்டர்வியூ) பெருமளவு குறைந்திருக்கின்றன. வழக்கமாக 100-க்கு 100 மாணவர்களுக்கு வேலை கிடைத்து விடும் ஐஐடி போன்ற முன்னணி நிறுவனங்களிலேயே பல மாணவர்கள் வேலை இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் முன்பு சொன்னது போல கல்லூரிகளின் எண்ணிக்கை தான் இங்கு இருக்கும் அத்தனை கல்லுரிகளிலும் திறமையான ஆசிரியர்கள் இல்லை வெறும் பணத்துக்காகவே நடத்தப்படும் இந்த கல்லூரிகளால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.
கீழே ஒரு வீடியோ உள்ளது இதை பாருங்கள் என்ஜினியரிங் காலேஜ்களின் உண்மையான தரம் இதுதான்....


Click it and Unblock the Notifications