1905-ஆம் ஆண்டு தொலைந்த தென்கொரிய கப்பலில் சிக்கயது 10லட்சம் கோடி தங்கம், வைரம்: வீடியோ.!
டிமிட்ரி டோன்ஸ்கோய் கப்பலில் மொத்தமாக 5000பெட்டிகளுக்கு அதிகமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவிற்கு சொந்தமன டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற கப்பல் கடந்த 1885-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, குறிப்பாக இந்த கப்பல் 20ஆண்டுகளுக்கு பயன்பட்டது, அதற்குபின்பு 1905-ம் ஆண்டு ரஷ்யா ஜப்பான் போர் ஏற்பட்டது, அந்த சமயம் தென்கொரியா பகுதியில் இந்த கப்பல் செல்லும் போது மூழ்கி காணமல் போய் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த டிமிட்ரி டோன்ஸ்கோய் கப்பல் தென்கொரிய கடல் பகுதிக்கு அருகே உள்ளேஉங்டோ (Ulleungdo) என்ற பகுதியில் காணமால் போய் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த டிமிட்ரி டோன்ஸ்கோய் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
டிமிட்ரி டோன்ஸ்கோய் அதிக வருடங்களாக உள்ளேஉங்டோ என்ற பகுதிலேயே இருந்துள்ளது, இந்நிலையில் தென்கொரிய கடல் ஆராய்ச்சி நிறுவனம் இதை கண்டுபிடித்து இருக்கிறது. மேலும் இந்த ஆராய்சி நிறுவனத்தின் பெயர் டீப்வொர்க்கர் என்று கூறப்படுகிறது.

480 மீட்டர்
குறிப்பாக இந்த கப்பலை 434 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பிடித்துள்ளனர்ஆராய்ச்சியாளர்கள். மேலும் இந்த கப்பலில் பல கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் மற்றும் பல்வேறு புதையல் காணப்பட்டுள்ளது, தற்சமயம் இந்த புதயலை தென்கொரிய மியூசியத்தில் வைத்துள்ளனர்.

பெட்டிகள்:
டிமிட்ரி டோன்ஸ்கோய் கப்பலில் மொத்தமாக 5000பெட்டிகளுக்கு அதிகமாக இருந்தது என்று கூறப்படுகிறது, அதில் தங்கம், வைரம் மற்றும் மற்றும் சிலைகள் போன்றவை அவற்றுள் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பீரங்கிகள், இயந்திர துப்பாக்கிகள், நங்கூரம் போன்றவற்றையும் கைப்பற்றியது ஆராய்ச்சி நிறுவனம்.

மொத்த மதிப்ப எவ்வளவு?
இந்த கப்பலில் எடுக்கப்பட்ட தங்கம் மற்றும் வைரம் விலை மதிப்பு என்னவென்றால் 133பில்லியன் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்திய மதிப்பில் ரூ.10லட்சம் கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவிற்கு கிடைக்குமா இந்த புதையல்:
தென்கொரிய கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதையலை தங்கள் நாட்டு சொத்து என்று உரிமை கூறியுள்ளது தென்கொரிய அரசு, அதன்படி இந்த புதையல் ரஷ்யாவிற்கு கிடைக்காது என தென்கொரிய அரசு சார்பில் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஆக்டோபர் மற்றும் நவம்பர்
மேலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த இந்த புதையல் வரும் ஆக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தென்கொரிய அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications