ஒரே மகனின் ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியவில்லை: ராணுவ வீரர் பிரதாப் சிங்.!
ராணுவத்தில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் குறித்து இந்திய ராணுவ வீரர் நாய்க் யாக்யா பிரதாப் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
ராணுவத்தில் தொடர்ந்து நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் குறித்து இந்திய ராணுவ வீரர் நாய்க் யாக்யா பிரதாப் சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டார், மேலும் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதன் காரணமாக உயர் அதிகாரிகள் தனக்கு தொந்தரவு கொடுப்பதாக குற்றம் சாட்டி இந்திய ராணுவ வீரர் நாய்க் யாக்யா பிரதாப் சிங் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவ வீரர் நாய்க் யாக்யா பிரதாப் சிங் கடந்த நவம்பர் மாதம் தானாக முன்வந்து தனது வேலையை ராஜினமா செய்தார. பின்பு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில்63 (violating good order and military discipline) and 41(2) (disobeying a lawful command given by superiors) போன்ற வழக்குகளில் 6மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் ராணுவ அதிகாரிகள் என்னை மனநிலை சரியில்லாதபடி அறிக்கை ஒன்றை அறிவிக்க முயன்றனர் ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததுஎன்று நாய்க் யாக்யா பிரதாப் சிங் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாதம் 8-ம் தேதி நாய்க் யாக்யா பிரதாப் சிங் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு கடினமாக இருந்தது. சில சமயங்களில் நான் ஒரு தியாகியாக மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன் "என்று அவர் கூறினார்.
யாக்யா பிரதாப் சிங் தனக்கு மிகவும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார், பின்பு அவர் கோதி கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தையும், அரை நிலத்தையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் ஒரே மகனின் பள்ளி கட்டணத்தை கூட சமர்ப்பிக்க கூட தற்சமயம் கடினமாக உள்ளது, ஆனால் என் கணவர் நீதிக்காக போராடுகிறார் என்று எனக்கு தெரியும், நான் அவருடன் இருக்கிறேன் என்று யாக்யா பிரதாப் சிங் மனைவி ரிச்சா சிங் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications