கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற பாம்பு! வைரலாகும் வீடியோ!
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள், அதேபோல் தற்பொழுது கேரளாவில் உள்ள கூலித்தொழிலாளியை ஒரு மலைப்பாம்பு கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளது. இந்த காட்சியை வீடியோ பதிவாகப் படம்பிடித்துள்ளனர். பார்ப்பவர்களை நடுங்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

புதர் வெட்டும் போது நடத்த சம்பவம்
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள நெய்யாறு என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த புவசந்திரன் நாயர் என்ற கூலித்தொழிலையான இவர், கேரளா இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் கல்லூரியில், புதர் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.

அவர் பாம்பைப் பிடிக்கவில்லை பாம்பு தான் அவர் பிடித்தது
புதர் வெட்டிக் கொண்டிருந்த புவசந்திரன் நாயர், பெரிய மலைப்பாம்பைப் பார்த்திருக்கிறார். பாம்பைப் பார்த்துப் பயப்படாமல், அதைப் பிடிக்கும் முயற்சியில் தானாகச் தனிச்சு செயல்பட்டிருக்கிறார் புவசந்திரன் நாயர். அவர் பாம்பைப் பிடிக்க முயற்சி செய்து, இறுதியில் பாம்பு தான் அவர் பிடித்திருக்கிறது.

கழுத்தை நெரிக்கத் துவங்கிய பாம்பு
ராட்சச மலைப்பாம்பு, புவசந்திரனின் தலையையும், கழுத்தையும் நன்றாகச் சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டது. சிறிது நேரத்தில் அவரை நெரிக்கத் துவங்கிவிட்டது. புவசந்திரனின் அலறல் கேட்டு அருகிலிருந்த மற்றவர்கள் பாம்பையும் அவரையும் பிரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர். இதை மற்றொருவர் வீடியோ எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்.
வைரலாகி வரும் வீடியோ
மலைப்பாம்பிடம் மற்றவர்களின் உதவி இல்லாமல் சிக்கினால், அவர்களின் கதை அதோகதி தான் என்பதை உணர்த்தும் விதத்தில் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது இந்த வீடியோ பதிவு. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications