பேஸ்புக்கில் பிரபாகரன் படத்தை சேர் லைக், செய்த இளைஞர் விடுதலை.. மற்றொருவருக்கு காவல்.!
இதை குற்றம் சாடப்பட்டதால் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது 10 மாதங்களுக்கு பிறகு நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் பதவிடப்பட்ட வாழ்த்து செய்தியை, இளைஞர் ஒருவர் லைக் சேர் செய்தார்.

இதை குற்றம் சாடப்பட்டதால் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தற்போது 10 மாதங்களுக்கு பிறகு நீதிமன்ற பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்போது இந்த பிரச்னையும் சற்று உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

வாழ்த்து செய்தி:
பேஸ்புக்கில் இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து பதிவொன்றை மையப்படுத்தி ரத்தினபுரியை சேர்ந்த இரண்டு இளைர்கள் பதிவேற்றம் செய்தனர். மேலும், அதில் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் படம் இடம் பெற்று இருந்தது. இந்த பதிவை தினேஸ் குமார் என்ற இளைஞர் பதிவேற்றம் செய்தார். இதை பேஸ்புக்கில் லைக் செய்த விதுசன் என்ற இளைஞரும் செய்து இருந்தனர்.

இரண்டு பேரும் கைது:
விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை சர்ச்சைகுறிய வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டதால், ரத்தினபுரியை சேர்ந்த இரண்டு இளைஞர்களையும், இலங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் சிறையிலும் அடைத்தனர்.

வாழ்த்து செய்தியில் என்ன இருந்தது:
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனிடம் படமும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இலச்சினையும் அந்த பதிவில் இருந்ததாக முறையிப்பட்டு;ளளது. நண்பர் ஒருவர் பகிர்ந்த பதிவை தனது பேஸ்புக்கில் விதுசன் என்ற இளைஞர், லைக் சேர் செய்துள்ளார் என்று குற்றம் சாடப்பட்டது.

குற்றச் செயல்:
சிவில் மற்றும் அரசயில் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் கீழ் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இந்த செயல் அமைந்ததா என்பது குறித்து விசாரணை நடக்கின்றது.
2007ம் ஆண்டு கொண்டு கொண்டுவரப்பட்ட ஐசிசிஆர்சி சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சர்ச்கைக்குறிய படத்தை லைக் செய்தால், குற்றம் ஆகாது எனவும், அதை சேர் செய்தால், அது குற்றத்தில் கீழ் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

விதுசனுக்கு பிணை:
பிணை வழங்க கோரி மீளாய்வு மனுவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகீ ராஜரத்ன விசாரணை நடத்தினார். இதில் விசதுசகுக்கு பிணை வழங்க உத்தரவிட்டார். மேலும், ஏன் லைக் செய்த குற்றத்திற்காக 10 மாதம் சிறையில் வைத்து இருந்தீர்கள் என்று குற்றம் சாட்டினர்.

தினேஷ் குமார் விடுதலைக்கு தடை:
தினேஷ்குமார் என்ற இளைஞர் பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அடையாள அட்டை இல்லாத காரணத்தினால், அவருக்கு பிணை பெறுதில் சிக்கல் இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

பேஸ்புக்கிடம் விளக்கம்:
மேலும் சர்ச்சைக்குரிய பிரபாகரனிடம் இடம் பெற்று இருந்ததால், இந்த செய்தி எந்த அளவுக்கு அடுத்தவர்களிடம் சென்று உள்ளது. எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்று பேஸ்புக் நிறுவனத்திடம் இலங்கை அரசும் விளக்க அறிக்கை கேட்டுள்ளது.


Click it and Unblock the Notifications