போலி செய்தி கண்டறிய முடிவு கட்டிய வாட்ஸ் ஆப் .!
இந்தியாவில் தேர்தல் திருவிழா நடக்கின்றது. இதையொட்டி பரப்படும் போலி செய்திகளை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ் ஆப்களில் பரப்படும் போலி செய்திகளை கண்ட
இந்தியாவில் தேர்தல் திருவிழா நடக்கின்றது. இதையொட்டி பரப்படும் போலி செய்திகளை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப்களில் பரப்படும் போலி செய்திகளை கண்டறிந்து கொள்ளும் வகையில், புதிய சேவை எண்ணை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் ஆப்:
தற்போது மக்களை தேர்தல் நடப்பதால், வாட்ஸ் ஆப்பில் ஏராளமான போலி செய்திகளை தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது.

பிரத்யோக சேவை எண்:
அதன்படி 9643000888 எனும் சேவை தொடர்பு எண் இந்திய பயனர்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள:
வாட்ஸ் அப்பில் தங்களுக்கு வரும் செய்திகள் உண்மைதானா எனும் சந்தேகம் இருந்தால் இந்த சேவை எண்ணுக்கு அந்த செய்திகளை பயனர்கள் அனுப்பலாம்.

திருப்பு அனுப்படும்:
உண்மைத் தன்மையை கண்டறிவதற்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள குழுவானது, அந்த செய்திகளை சோதனை செய்து அவற்றின் முடிவுகளை பயனர்களுக்கு திருப்பி அனுப்பும்.

வாட்ஸ் ஆப் மொழி சேவை:
ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாள மொழிகளை உள்ளடக்கிய வீடியோக்கள், குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்பட செய்திகளின் உண்மைத் தன்மையை இந்த சேவை மூலம் பெறலாம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications