இலங்கை குண்டுவெடிப்பில் சமூக வலைதளத்தில் தொடர்பு: கோவையில்என்ஐஏஓ சோதனை.!
இந்நிலையில், இந்த சம்பவத்தில் சமூகவலைளத்தின் உதவியோடு தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சமந்தமாக தமிழகத்தில் கோவை, கேரளா மாநிலத்திலும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில், 253 பேர் இறந்தனர்.
500க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் சமூகவலைளத்தின் உதவியோடு தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சமந்தமாக தமிழகத்தில் கோவை, கேரளா மாநிலத்திலும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கோவையில் மட்டும் 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளின் சமூக வலைதளம், இமெயில் போன்றவைகளால் உறுதி செய்யப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தாக்குதல்:
கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் ஈஸ்டர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 36 வெளிநாட்டினர் உட்பட 253 போர் பலியாகினர். 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இலங்கையை சேர்ந்த தேசிய தவ்ஹூத் ஜமாத் அமைப்பினரை ஐஎஸ் பயன்படுத்தியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

சமூக வலைதள கணக்குள் ஆய்வு:
இலங்கை, தமிழ்நாடு, கேரளா ஆகிய இடங்களில் இஸ்லாம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று இளைஞர்களுக்கு தீவிரவாதி ஹாசிம் வேண்டுகோள் விடுத்திருப்பது வீடியோவில் இருந்தது.
இது தொடர்பாக ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய இ மெயில், சமூக இணையதள கணக்குள ஆராய்ந்த போது தான், இலங்கை தேவலாலயங்களில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

இலங்கைக்கும் தகவல் அனுப்பட்டது:
இதுதொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும், ஈ மெயில் கணக்குகளும் தனிப்பட்ட முறையில் என்ஐஏ அதிகாரிகள் ஆராய்ந்தனர்.
அப்போது, இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டடிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக இலங்கைக்கும் அதிகாரிகள் தகவல் அளித்தனர்.

என்ஐஏ அதிகாரிகள் சோதனை:
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர், அன்புநகர், உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களுடன் சமூக வலைதளங்களில் தொடர்பு இருப்பதை அடுத்து அசாருதீன், சதாம், அக்ரம் ஜிந்தா, அபுபக்கர் சித்திக் உட்பட 7 பேரின் வீடுகளில் கொச்சி மற்றும் கோவையில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் பரபரப்பு:
கோவையில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications