கோவிலில் வந்தது தேங்காய்உடைக்கும் புதிய தொழில்நுட்பம்: அப்ப பூசாரிக்கு வேலை இல்லையா?
தற்சமயம் புதிய டெக்னாலிஜியில் தேங்காயை சாமியே உடைப்பதற்கு புதிய ஏற்பாடு செய்துள்ளனர். கோவிலுக்கு வருபவர்கள் தேங்காயை சாமியின் வாயில் வைக்கின்றனர்.
இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் பல்வேறு வகையில் நமக்கும் உதவியாக தான் இருக்கிறது என்று சொல்லவேண்டும். குறிப்பாக பல்வேறு பொது இடங்களில் மக்களுக்கு தகுந்தபடி புதிய தொழில்நுட்பங்கள் நன்றாக தான் இருக்கும்.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கோவிலுக்கு செல்லும்போது அர்ச்சனை செய்வதற்காக அர்ச்சனை தட்டு வாங்குவது வழக்கம், அதில் தேங்காய், வாழைப்பழம், பூ, சூடம் போன்ற சில பொருட்கள்கள் கண்டிப்பாக இருக்கும்.
அதிலும் நம் மக்களுக்கு அர்சனை செய்யும்போது ஒரு பதட்டம் இருக்கும், அது என்னவென்றால் தேங்காய் சரியாக உடையவேண்டும், பின்பு கெட்டுப்போன தேங்காயாக இருக்க கூடாது எனவும் இருக்கும். குறிப்பாக தேங்காய் கோணலாக
உடையாமல் இருக்கவேண்டும் என்ற பதட்டம் நம் மக்களுக்கு அதிமாக இருக்கும்.

இதுபோன்று தேங்காய் கோணலாக இருந்துவிட்டால் ஏதோ தெய்வ குற்றம் என எண்ணி பரிகாரமும், சிறப்பு பூஜை செலவுகளும் நம் மக்கள் செய்வர்.
தற்சமயம் புதிய டெக்னாலிஜியில் தேங்காயை சாமியே உடைப்பதற்கு புதிய ஏற்பாடு செய்துள்ளனர். கோவிலுக்கு வருபவர்கள் தேங்காயை சாமியின் வாயில் வைக்கின்றனர். அது மிகவும் அழகாக உடைக்கப்பட்டு ஒரு மூடி தேங்காய் மட்டும் சாமியின் கையில் வந்து கடைக்கின்றது, அதை மக்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

அதன்படி இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, அதுமட்டுமின்றி இதனால் பக்தர்கள் விரைவில் தரிசனம் பெற்றும் செல்லும் சூழ்நிலை உருவாகிறது என்று தான் கூறவேண்டும்.
கூடிய விரைவில் இந்த தொழில்நுட்பம் பல்வேறு கோவில்களுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இதைபோல் பல்வேறு பொது இடங்களிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications