Just In
- 2 hrs ago
மார்ச் 4: 108எம்பி கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 10.!
- 3 hrs ago
விரைவில் களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ32 4ஜி: 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு!
- 3 hrs ago
மலிவு விலையில் பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.! எவ்வளவு வேகத்தில் பயன்படுத்தலாம் தெரியுமா?
- 4 hrs ago
அசைக்க முடியாது: மீண்டும் முதலிடம்- ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி!
Don't Miss
- News
நெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு
- Automobiles
நாட்டின் சிறந்த பிரீமியம் கார் எது தெரியுமா? பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரையே பின்னுக்கு தள்ளிய லேண்ட் ரோவர் கார்!
- Lifestyle
சத்தான... வாழைத்தண்டு சூப்
- Movies
ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ
- Sports
கடைசி மேட்சில் ஆட முடியாது.. திடீரென வந்து சொன்ன பும்ரா.. அணியில் இருந்து விலகல்.. என்ன நடந்தது?
- Finance
தினமும் 100 கோடி ரூபாய்.. அசத்தும் பாஸ்டேக் வசூல்.. மீண்டும் புதிய உச்சம்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒன்னு வாங்குனா ஒன்னு இலவசம்: "அதுக்கு முன்னாடி இத பண்ணுங்க" நம்பி செய்த பெண்- என்ன நடந்தது தெரியுமா?
பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைதளங்களின் மூலம் நட்பாக பேசிப்பழகி பண மோசடி செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், ஏமாற்றுபவர்கள் நூதன முறையை கையாண்டு ஏமாற்றிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

வேலை வாங்கி தருவதாக மோசடி
குறிப்பாக மின்னஞ்சல், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அதற்கு முதற்கட்ட பணத்தையும் வாங்கி ஏமாற்றிய நிகழ்வையும் நாம் கேட்டிருப்போம். அதேபோல் பேஸ்புக்கில், வாட்ஸ் ஆப்பில் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பண மோசடி செய்தது குறித்த செய்திகளை நாம் கடந்து வந்திருக்கிறோம்.

பரிசு கிடைத்துள்ளதாக மோசடி
அதுமட்டுமின்றி சில சமயங்களில் ஒரு பிரபல நிறுவனத்தில் இருந்து உங்கள் மெயில் ஐடிக்கு கோடிக்கணக்கான பணம் பரிசாக கிடைத்திருக்கிறது என ஒரு மின்னஞ்சல் வரும். ஓரிரு நாளில் விமான நிலையத்தில் இருந்து சுங்க அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் போன் செய்து உங்களது பரிசுத் தொகை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. அதை பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் போன்ற காரணங்களை கூறி நம்மிடம் முன்பணம் கேட்பார்கள். இதுபோல் மோசடி செய்பவர்கள் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
பெங்களூருவின் எலாசெனஹள்ளி பகுதியை சேர்ந்த சவிதா சர்மா, முகநூல் பக்கத்தில் தாலி உணவு வகை ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என உணவகம் ஒன்றின் பேரில் விளம்பரம் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை விளம்பரத்தால் ஈர்க்கப்பட்ட சவிதா விளம்பர லிங்கை கிளிக் செய்து அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.

டெலிவரி செய்பவரிடம் மீதத் தொகை கொடுத்தால் போதும்
சவிதா தொடர்பு கொண்ட எண்ணில் இருந்து மறுமுனையில் பேசிய நபர், இந்த சலுகையை நீங்கள் பெற வேண்டும் என்றால் முதலில் ரூ.10-ஐ ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மீதமுள்ள தொகை சாப்பாடு டெலிவரி செய்யவரும் நபரிடம் கொடுத்தால் போதும் என கூறியுள்ளார்.

ரூ.50,000 டெபிட் செய்ததாக மெசேஜ்
அதோடு மட்டுமின்றி தங்களது எண்ணிற்கு ஒரு லிங்க் அனுப்பப்படும் அதில் இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்யும்படி கூறியுள்ளார். அதில் கேட்கப்பட்ட டெபிட் கார்டு எண் அதன் பின் உட்பட அனைத்து கேள்விகளையும் சவிதா பூர்த்தி செய்து அனுப்பியுள்ளார். அவ்வளவுதான் அடுத்த சில நிமிடங்களில் சவிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50000 டெபிட் செய்யப்பட்டதாக அவரது எண்ணிற்கு மெசேஜ் வந்துள்ளது.

சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார்
டெபிட் மெசேஜ் பார்த்து அதிர்ச்சியடைந்த சவிதா அந்த எண்ணுக்கு உடனடியாக கால் செய்து பார்த்துள்ளார். ஆனால் அந்த எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சவிதா இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இந்த விளம்பரம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190